Skip to main content

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சமஸ்கிருதம்:கற்பிக்க தயாராகிறது கர்நாடகா


          மத்திய அரசின் உத்தரவுப்படி, கர்நாடகாவிலுள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், அடுத்த ஆண்டிலிருந்து, மூன்றாவது மொழியாக, சமஸ்கிருதம் கற்பிக்கப்படுவதை பெரும்பாலான பள்ளிகள் வரவேற்றுள்ளன.கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், மூன்றாவது பாடமாக, ஜெர்மன் மொழி
கற்பிக்கப்பட்டு வந்தது.

       பள்ளிகள் தயார்:கடந்த அக்டோபர், 27ம் தேதி, ஜெர்மன் மொழிக்கு பதிலாக, சமஸ்கிருதத்தை பயிற்றுவிக்க, மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை செயல்படுத்த, கர்நாடகா கேந்திரிய வித்யாலயா பள்ளிகளும்தயாராகி வருகின்றன. மத்திய அரசின் முடிவை, கர்நாடகா சமஸ்கிருத பல்கலைக்கழக துணைவேந்தர் சீனிவாச வரகேதி வரவேற்று கூறியுள்ளதாவது:நம் மொழியை பயிற்றுவிப்பதற்கு பதில், அந்நிய மொழியை பயிற்றுவிப்பது தேவையற்றது.

       மத்திய அரசின், உத்தரவு வரவேற்வேற்கத்தக்கது. துவக்கத்தில், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், மூன்றாவது விருப்ப பாடமாக சமஸ்கிருதம் கற்பிக்கப்பட்டது. அதன் பிறகே, விருப்ப மொழியாக, ஜெர்மன் மொழி அறிமுகப்படுத்தப்பட்டது.சமஸ்கிருதம், கற்று கொள்வதில் எவ்வித சிரமமும் இல்லை. அரசின் இந்த திட்டத்தினால், சமஸ்கிருதத்துக்கு உரிய அந்தஸ்து இனி கிடைக்கும். ஏற்கனவே, இந்தியை பாடமாக எடுத்துள்ளவர்களுக்கு, சமஸ்கிருதம் கற்பது கடினமல்ல. ஒரு புதிய மொழியை கற்றுக்கொள்வதில், குழந்தைகளுக்கு சிரமமும் இல்லை.இவ்வாறு, அவர் கூறினார்.

         இதேபோன்று, பெரும்பாலான கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வர்களும், ஆசிரியர்களும் வரவேற்று கருத்து தெரிவித்துள்ளனர்.இதற்கு எதிராக சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறுகையில், 'ஜெர்மனி மொழிக்கு பதில், சமஸ்கிருதம் மொழியை, விருப்ப பாடமாக மாற்றுவதில், அரசு அவசரம் காட்ட தேவையில்லை. இந்த மாற்றம், குறிப்பாக, எட்டாம் வகுப்பு மாணவர்களை பாதிக்கும். இந்தாண்டு, செமஸ்டர் முடியும் வரை, அரசு, பொறுமையாக இருந்து இருக்கலாம்' என்றனர்.

மறுபரிசீலனை:பெங்களூரு பல்கலைக்கழக, அயல் மொழி துறை முன்னாள் தலைவர் ஹிரேசி கூறியதாவது:அடுத்தாண்டில் சமஸ்கிருத மொழியை துவக்குவது குறித்து, அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும். திடீரென, இப்படியொரு முடிவை, அரசு எடுப்பது, அயல் நாட்டு மொழிகளை கற்பதில், மாணவர்களின் ஆர்வத்தை குறைக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு