Skip to main content

விருப்ப அடிப்படை மதிப்பீட்டு திட்டத்திற்கான புதிய விதிமுறை வகுப்பு


புதுடில்லி: பல்கலைகளில், விருப்ப அடிப்படை மதிப்பீட்டு திட்டத்திற்கான, புதிய விதிமுறைகளை, பல்கலை மானியக் குழு - யு.ஜி.சி., வகுத்துள்ளது.

இதுகுறித்து, பல்கலைகளுக்கு, யு.ஜி.சி., செயலர் ஜஸ்பால் சாந்து எழுதியுள்ள
கடிதம்: பல்கலைகள், தங்களுக்கு என தனியான மதிப்பீட்டு முறையை பின்பற்றுகின்றன. இதனால், மாணவர்கள் பிற பல்கலைகளுக்கு உயர்கல்விக்கு செல்லும்போதும், பணி வாய்ப்பு பெறும்போதும் பாதிக்கப்படுகின்றனர்.

இந்த பிரச்னையை போக்க, விருப்ப அடிப்படை மதிப்பீட்டு திட்டம் - சி.பி.சி.எஸ்., என்ற திட்டத்தை யு.ஜி.சி., கொண்டு வந்து, அதை பல்கலைகள் ஏற்றுக் கொண்டுள்ளன. அதேநேரம், ஒரு பல்கலையில் இருந்து மற்றொரு பல்கலைக்கு மாறும் மாணவர்களுக்கு, சில நேரங்களில் பிரச்னை ஏற்படுகிறது.

எனவே, சி.பி.சி.எஸ்., திட்டத்திற்கு, பொதுவான விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இவற்றை, பல்கலைகள் பின்பற்ற வேண்டும். இந்த திட்டத்தை, 2015 - 16 கல்வி ஆண்டு முதல், செயல்படுத்த வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா