Skip to main content

விருப்ப அடிப்படை மதிப்பீட்டு திட்டத்திற்கான புதிய விதிமுறை வகுப்பு


புதுடில்லி: பல்கலைகளில், விருப்ப அடிப்படை மதிப்பீட்டு திட்டத்திற்கான, புதிய விதிமுறைகளை, பல்கலை மானியக் குழு - யு.ஜி.சி., வகுத்துள்ளது.

இதுகுறித்து, பல்கலைகளுக்கு, யு.ஜி.சி., செயலர் ஜஸ்பால் சாந்து எழுதியுள்ள
கடிதம்: பல்கலைகள், தங்களுக்கு என தனியான மதிப்பீட்டு முறையை பின்பற்றுகின்றன. இதனால், மாணவர்கள் பிற பல்கலைகளுக்கு உயர்கல்விக்கு செல்லும்போதும், பணி வாய்ப்பு பெறும்போதும் பாதிக்கப்படுகின்றனர்.

இந்த பிரச்னையை போக்க, விருப்ப அடிப்படை மதிப்பீட்டு திட்டம் - சி.பி.சி.எஸ்., என்ற திட்டத்தை யு.ஜி.சி., கொண்டு வந்து, அதை பல்கலைகள் ஏற்றுக் கொண்டுள்ளன. அதேநேரம், ஒரு பல்கலையில் இருந்து மற்றொரு பல்கலைக்கு மாறும் மாணவர்களுக்கு, சில நேரங்களில் பிரச்னை ஏற்படுகிறது.

எனவே, சி.பி.சி.எஸ்., திட்டத்திற்கு, பொதுவான விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இவற்றை, பல்கலைகள் பின்பற்ற வேண்டும். இந்த திட்டத்தை, 2015 - 16 கல்வி ஆண்டு முதல், செயல்படுத்த வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு