Skip to main content

அஞ்சல் மூலம் காந்தியக் கல்வி


சென்னையில் உள்ள காந்தி கல்வி நிலையத்தின் சார்பில் "அஞ்சல் மூலம் அறிவோம் காந்தியை' என்ற சான்றிதழ் படிப்பு வழங்கப்படுகிறது. இதுகுறித்து காந்தி கல்வி நிலையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: காந்தி குறித்து
தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் "அஞ்சல் மூலம் அறிவோம் காந்தியை' என்ற சான்றிதழ் படிப்பு வழங்கப்படுகிறது. இதனை தமிழ் அல்லது ஆங்கில மொழியில் படிக்கலாம். இதில் சேர்பவர்களுக்கு பயிற்சி ஏடுகள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படும். இதற்கு கல்வித் தகுதி தேவையில்லை. வயது வரம்பு கிடையாது.

வரும் 2015-ஆம் ஆண்டு, ஜனவரி 30-இல் தேர்வு நடைபெறும். தேர்வு எழுத்த விரும்புவோர் வரும் ஜனவரி 10-க்குள் பதிவு செய்துகொள்ள வேண்டும். தேர்ச்சி பெறுபவர்களுக்குச் சான்றிதழ் வழங்கப்படும். இதற்கு பயிற்சி கட்டணம் கிடையாது. பதிவுக் கட்டணம் ரூ.200 மட்டுமே. இதனை "GANDHI STUDY CENTER' என்ற பெயரில் பண விடை (மணி ஆர்டர்) அல்லது வங்கி வரைவோலையாக (டிமான்ட் டிராப்ட்) "கெளரவ இயக்குநர், காந்தி கல்வி நிலையம், 58, வெங்கட் நாராயணா சாலை, தியாகராய நகர், சென்னை-17' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு 044-24340607, 24346549 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு