Skip to main content

மெதுவாக கற்கும் மாணவர்களுக்கு சிறப்பு கையேடு: பள்ளிக்கல்வித்துறை

பத்தாம் வகுப்பு, பிளஸ்2வில் மெதுவாக கற்கும் மாணவர்களுக்கு சிறப்புகையேடு வழங்கி பயிற்சியளிக்க தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அடுத்தாண்டு மார்ச், ஏப்ரலில் நடக்கும் 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில்
பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெறும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அதன் ஒருபகுதியாக இவ்வகுப்புகளில் காலாண்டுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் (மெல்லக்கற்கும் மாணவர்கள்) கண்டறியப்பட்டு அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் மூலம் பாட வாரியாக கற்பிக்க, சிறப்பு கையேடு தயாரிக்கப்பட்டுள்ளது. விரைவில் மாணவர்களிடம் வழங்கி பயிற்சியளிக்கப்படும்.

மாவட்ட கல்வித்துறை வட்டாரங்கள் கூறுகையில்,"இந்த சிறப்பு கையேட்டில் முக்கிய வினாக்கள், அதற்கான விடைகள் இடம் பெற்றுள்ளன. அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள்மூலம் மெல்லக்கற்கும் மாணவர்களிடம் இவை வழங்கப்படும். இதன்மூலம் அரையாண்டு, பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறவும், அதிக மதிப்பெண் பெறலாம்,” என்றார்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா