Skip to main content

உதிரி ஆசிரியர்கள் எத்தனை பேர்? பள்ளிகளில் திடீர் ஆய்வு

மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ற ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதுகுறித்து, அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில், கல்வித்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தினர்.
அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை
அதிகரித்ததன் காரணமாக, கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க வலியுறுத்தி, பள்ளி நிர்வாகத்தினர் கல்வித்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.இதையடுத்து, அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் திடீர் விசிட் நடத்தி, அறிக்கை சமர்ப்பிக்க மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.இதன்படி, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 12 அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகள் உட்பட, தமிழகத்திலுள்ள 1,044 அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில், உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் மற்றும் அரசுமேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கொண்ட குழுவினர் ஆய்வு நடத்தினர்.

இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: பள்ளிகளில் ஒவ்வொரு வகுப்பிலும் மொத்த மாணவர் எண்ணிக்கை மற்றும் அன்றைய தினத்தில் மாணவர்களின் வருகை குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வில், சில மாவட்டங்களில் மாணவர் எண்ணிக்கை குறைவாகவும், ஆசிரியர்எண்ணிக்கை அதிகரித்தும் உள்ளது தெரியவந்தது. மாணவர் எண்ணிக்கை குறைந்த பள்ளிகளில் கூடுதலாக உள்ள ஆசிரியர்களை, மாணவர் எண்ணிக்கை அதிகமாக உள்ள பள்ளிகளுக்கு மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு