Skip to main content

குறைந்த மாணவர்களைக் கொண்ட மாநகராட்சிப் பள்ளிகளை தனியாரிடம் ஒப்படைக்க முடிவு




மாணவர் சேர்க்கை 25க்கும் குறைவாக உள்ள ஏழு மாநகராட்சி பள்ளிகளை, தனியார் மூலம் நடத்தி, வரும் கல்வியாண்டு முதல் சேர்க்கையை அதிகரிக்க,
சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் சில ஆண்டுகளுக்கு முன், ஒரு லட்சத்திற்கும் மேல் இருந்த மாணவர்கள் எண்ணிக்கை, தற்போது 80 ஆயிரமாக குறைந்துள்ளது.
தனியாருக்கு எது?
குறிப்பாக, திருவல்லிக்கேணி, சேத்துபட்டு, தி.நகர் ஆகிய பகுதிகளில் உள்ள மாநகராட்சி பள்ளிகளில், மாணவர் சேர்க்கை வெகுவாக குறைந்துள்ளது. ஒட்டுமொத்த வகுப்பிலும் சேர்த்து 50 மாணவர்கள் மட்டும் உள்ள பள்ளிகள் நகரில் அதிகமாக உள்ளன.
மொத்தம் 25 மாணவர்களுக்கும் குறைவாக படிக்கும் ஏழு பள்ளிகள் தற்போது இயங்கி வருகின்றன. அந்த பள்ளிகளை மூட விரும்பாத மாநகராட்சி நிர்வாகம், 25க்கும் குறைவாக மாணவர் சேர்க்கை உள்ள பள்ளிகளை, தனியார் மூலம் நடத்தி, சேர்க்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.
அதற்காக, மும்பை, டில்லி, ஐதராபாத் ஆகிய நகரங்களில் உள்ள பெரிய கல்வி நிறுவனங்களுடன் விரிவான ஆலோசனை நடத்திய மாநகராட்சி கல்வித்துறை, ஏழு பள்ளிகளை தேர்வு செய்து, அப்பள்ளிகளை வரும் கல்வியாண்டு முதல் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளது. இதன்படி பள்ளி கட்டடம், உபகரணங்கள், மின் கட்டணம், பராமரிப்பு, மாணவர்களுக்கான சலுகைகள் வழங்குவது ஆகிய பணிகளை மாநகராட்சி மேற்கொள்ளும்.
நிர்வாகம், ஆசிரியர்கள் நியமனம், மாணவர் சேர்க்கை ஆகிய பணிகளை, பள்ளியை நடத்தும் தனியார் நிறுவனம் மேற்கொள்ளும். அதற்காக ஒரு மாணவனுக்கு 10 ஆயிரம் ரூபாய் வரை ஆண்டிற்கு செலவிட மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
எந்தெந்த பணிகள்?
இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது: தி.நகர்., திருவல்லிக்கேணி, சேத்துப்பட்டு உள்ளிட்ட தனியார் பள்ளிகள் ஆதிக்கம் அதிகம் உள்ள இடங்களில், மாணவர் சேர்க்கை குறைவாக உள்ளது. இந்த பகுதிகளில் மட்டும் ஏழு பள்ளிகளை தனியாரிடம் ஒப்படைக்க தேர்வு செய்யப்பட்டது.
கல்வியாண்டு துவங்குவதற்கு முன், இந்த பள்ளிகளை நடத்த உள்ள நிறுவனங்கள் விரும்பும் வகையில், கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி தரப்படும். சீருடை மாற்றம் குறித்து முடிவு செய்யப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
விரிவாக்க பகுதிக்கு விடிவு எப்போது?
சென்னை மாநகராட்சி விரிவாக்க பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளிகள், நகராட்சி பள்ளிகளை, மாநகராட்சி கல்வித்துறை கட்டுப்பாட்டில் எடுத்து பராமரிக்க, தொடர்ந்து பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது குறித்து அரசாணை வெளியிட, மாநகராட்சி, அரசுக்கு கோப்பு அனுப்பியுள்ளது. ஆனால், இதுவரை அனுமதி கிடைக்காததால், விரிவாக்க பகுதி பள்ளிகள் பரிதாப நிலையில் உள்ளன. அரசு கல்வித்துறையை காட்டிலும், மாநகராட்சி கல்வித்துறை மூலம், மாணவர்களுக்கு அதிகமான சலுகைகள் வழங்கப்படுவதால், விரைவில் விரிவாக்க பகுதி பள்ளிகளை, மாநகராட்சியோடு சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்துள்ளது.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு