Skip to main content

அகில இந்திய குடிமைப் பணிகள் பயிற்சி நுழைவு தேர்வு எழுதுவதற்கான ஹால் டிக்கெட்.

அகில இந்திய குடிமைப் பணிகள் பயிற்சிக்கான நுழைவு தேர்வு எழுத,இணையதளம் மூலம் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
சென்னையில் உள்ள தமிழக அரசின் குடிமைப் பணி தேர்வு பயிற்சி மைய
முதல்நிலை பயிற்சிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு, விழுப்புரம் அரசு கலைக் கல்லூரியில் வரும் 23ம் தேதி நுழைவுத் தேர்வு நடக்கிறது.

நுழைவு தேர்வு எழுத விண்ணப்பித்தவர்கள் நுழைவுச்சீட்டுகளை மைய இணையதளம் www.civilservicecoaching.com மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பதிவிறக்கம் செய்ய இயலாதவர்கள், தாங்கள் தேர்வு எழுத தெரிவு செய்துள்ள மாவட்ட தேர்வு மையத்திற்கு(மாவட்ட தேர்வு மைய விவரங்களை இணைய தளத்தில் காணவும்) தேர்வு நாள் அன்று 1 மணி நேரம் முன்னதாகவே சென்று நுழைவு சீட்டுக்களை பெற்று, தேர்வு எழுதலாம். சென்னை மாவட்டத்தைச் தேர்வு செய்த மாணவர்கள் பதிவிறக்கம் செய்ய இயலாதவர்கள் 044-24621475/9940636267 என்ற தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தேர்வு மைய விபரங்களை பெற்றுக் கொள்ளலாம். இத்தகவலை விழுப்புரம் கலெக்டர் சம்பத் தெரிவித்துள்ளார்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு