Skip to main content

நாட்டின் நலன் கருதியே கேந்திர வித்யாலயாவில் சமஸ்கிருதத்தை சேர்த்தோம்



நாட்டின் நலன் கருதியே கேந்திர வித்யாலயாவில் சமஸ்கிருதத்தை சேர்த்தோம்: ஸ்மிருதி இரானி விளக்கம்

மத்திய அரசின் கண்காணிப்பு மற்றும் நிர்வாகத்தின்கீழ் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் ‘கேந்திர வித்யாலயா’ பள்ளிகள் இயங்கி வருகின்றன.
இப்பள்ளியில் பயிற்று மொழியாக ஆங்கிலமும், தாய்மொழியாக இந்தியும்
, மூன்றாவது (விருப்ப) மொழியாக ஜெர்மனும் இருந்து வருகின்றன.

இதற்கிடையில், இந்தியாவின் தொன்மை வாய்ந்த மொழியான சமஸ்கிருதத்தை நீக்கிவிட்டு ஜெர்மன் மொழியை பாடத்திட்டத்தில் இணைத்த முந்தைய மத்திய அரசின் முடிவுக்கு எதிராகவும், இது கல்விக் கொள்கைக்கு எதிரானது என்றும்கேந்திர வித்யாலயா ஆசிரியர்களில் சிலர் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.கேந்திர வித்யாலயா பள்ளிகளில் ஜெர்மன் மொழியை பயிற்றுவிப்பது தொடர்பாக ‘கோயேத்தே பயிற்சியகம்’ மற்றும் ‘மேக்ஸ் முல்லர் பவன்’ ஆகியவற்றுக்கிடையே கடந்த 2011-ம் ஆண்டு செய்யப்பட்ட புரிந்துணர்வுஒப்பந்தமானது, எந்த நிலையிலும் மத்திய அமைச்சகத்துக்கு பரிந்துரைக்கப்படவில்லை என அரசு வட்டாரங்கள் கூறிவருகின்றன.இதற்கிடையில், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை மந்திரி ஸ்மிருதி இரானி தலைமையில் கடந்த மாதம் 27-ம் தேதி கேந்திர வித்யாலயா பள்ளிகளின் கவர்னர்கள் குழு கூட்டம் நடைபெற்றது.6 முதல் 8 வரையிலான வகுப்புகளில் மூன்றாவது மொழியாக இருக்கும் ஜெர்மன்மொழியை நீக்கிவீட்டு, இனி சமஸ்கிருதத்தை மூன்றாம் மொழியாக சேர்ப்பது என இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.இந்த முடிவையடுத்து, இந்த (2014) கல்வியாண்டின் இடைக்காலத்திலேயே இப்பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு சமஸ்கிருதத்தை கூடுதல் மூன்றாம் மொழியாக கற்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.இந்த புதிய முடிவினால் நாடெங்கிலும் உள்ள சுமார் 500 கேந்திர வித்யாலயா பள்ளிகளில் பயிலும் 6 முதல் 8 வகுப்புக்கிடையிலான சுமார் 70 ஆயிரம் மாணவ-மாணவிகள் சிரமத்துக்குள்ளாக நேரிடும் என அவர்களது பெற்றோர் கருதுகின்றனர்.

இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக இன்று செய்தியாளர்களுக்கு பதிலளித்த ஸ்மிருதி இரானி, ‘நாட்டின் நலன் கருதியே ஜெர்மனுக்கு பதிலாக சமஸ்கிருதத்தை சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது’ என்று கூறியுள்ளார்.இந்த முடிவு தொடர்பாக ஊடகங்கள் குழப்பமான அறிக்கைகளை வெளியிடுவதால், கேந்திர வித்யாலயா பள்ளிகளில் பயில்பவர்களின் பெற்றோரிடையே பீதி ஏற்பட்டுள்ளதாகவும், சமஸ்கிருதத்தை சேர்க்கும் முடிவுக்கான காரணம் என்ன? என்பதை தெளிவாக விளக்கி மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை இன்று அறிக்கை வெளியிடும் என்றும் அவர் தெரிவித்தார்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு