Skip to main content

குழந்தை தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தினால் கடத்தல் வழக்கு: அரசு உத்தரவு!!


தமிழகத்தில், 2.84 லட்சம் குழந்தை தொழிலாளர்கள் உள்ளனர் என்பது அம்பலமாகி உள்ளது. இதை கட்டுப்படுத்த, குழந்தை தொழிலாளரை பணிக்கு
அமர்த்தினால், கடத்தல் வழக்கு பதிவுசெய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.


குறைவு: பொதுவாக 14 வயது வரையிலான குழந்தைகளை, வேலைக்கு வைக்க தடை உள்ளது. தடையை மீறியும், குழந்தைத் தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்துவது அதிகரித்து வருகிறது. தமிழகத்தில், 2001ல், 4.19 லட்சம் குழந்தை தொழிலாளர்கள் இருந்தனர். அரசின் பல்வேறு முயற்சிகளால் 2012 கணக்கெடுப்பின்படி, 29,656 பேராக குறைந்து விட்டது என, தமிழக அரசு கூறி வருகிறது.

ஆனால், 2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரப்படி, தமிழகத்தில் 2.84 லட்சம் குழந்தை தொழிலாளர்கள் உள்ளனர்; அதிக குழந்தை தொழிலாளர் உள்ள 10 மாநிலங்கள் பட்டியலில், தமிழகமும் இடம் பெற்றுள்ளது, அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இதில், முழுநேரமாக, 1.51 லட்சம் பேரும்; பகுதிநேரமாக, 1.33 லட்சம் பேர் வேலை செய்கின்றனர். சென்னையில் 26 ஆயிரம் பேர் உள்ளனர்.

குழந்தை தொழிலாளருக்கு எதிரான, பிரசார இயக்க தேசிய தலைவர் ஜோசப் விக்டர் ராஜ் கூறுகையில், &'&'குழந்தை தொழிலாளர் இல்லாத மாவட்டமாக அறிவிக்கப்பட்ட பெரம்பலூரில், 2,600 பேர் வேலையில் உள்ளனர். மாநில அரசு உண்மையை மறைக்காமல், கட்டுப்படுத்துவதில் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும்" என்றார்.

கடத்தல் வழக்கு

தொழிலாளர் நலத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: மத்திய அரசின் கணக்கின்படி, 2.84 லட்சம் தொழிலாளர்கள் உள்ளது, அதிர்ச்சி தருகிறது. எனவே 14 வயதுக்கு கீழ் உள்ளோரை, வேலைக்கு வைத்தால், குழந்தை கடத்தல் வழக்கு பதிவுசெய்ய, அரசு உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம், சேலம் மாவட்ட பருத்தி தோட்டங்களில் வேலைசெய்த, 100 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களை வேலைக்கு வைத்த விவசாயிகள், கடத்தல் வழக்கில் கைதாகி, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மாவட்டந்தோறும், இப்பிரச்னையில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து, அறிக்கை தர அரசு உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

சிறை தண்டனை உண்டு

குழந்தைகள் கடத்தல் வழக்கு (இந்திய தண்டனை சட்டம் - 370, 365, 367), பதிவு செய்வதால், கைது செய்யப்படுவோர், எளிதில் ஜாமினில் வர முடியாது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்கும். குழந்தை தொழிலாளர் வேலை செய்தால், 1098 என்ற கட்டணமில்லாத தொலைபேசிக்கு மக்கள் தெரிவிக்கலாம்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு