Skip to main content

இந்தியாவில் ஆபாச இணையதளங்களுக்கு தடை: மத்திய அரசு உத்தரவு


இந்தியாவில் அனைத்து வித ஆபாச இணையதளங்களுக்கும் தடை விதிக்க செய்ய மத்திய அரசு தீர்மானித்துள்ளது. இவற்றை யாரும் பார்க்காமல் தடுக்கும்படியான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அனைத்து இன்டர்நெட்
சேவை நிறுவனங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சமீபகாலமாக இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து காணப்படுவதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால் சர்வதேச அளவில் இந்தியா பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நாடு என்ற பிம்பம் உருவாகி வருகிறது. எனவே, இந்தியாவில் பெண்களின் பாதுகாப்பை அதிகரிக்க மத்திய அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருகட்டமாக இணைய தளங்களில் ஆபாச வலைதளங்களை தடை செய்ய முடிவு செய்துள்ளது.
இத்திட்டத்தினை மத்திய அரசு மூன்று கட்டங்களாக பிரித்து செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி, முதலாவதாக இந்தியாவில் புழக்கத்தில் உள்ள ஆபாச இணையதளங்கள் குறித்து கணக்கெடுப்பது. பின்னர், ஐஎஸ்பிக்கள் மூலம் மொத்தமாகத் தடை செய்வது. இவ்வாறு மொத்தமாக முடக்கம் செய்யும் போது அவை எதிர்காலத்தில் இணைய வேகத்தை குறைக்க வாய்ப்புள்ளதா என்பதை ஆராய்வது ஆகும். சில நாடுகளில் ஆபாசப் படம் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்றாலும் கூட, இந்திய கலாச்சாரத்திற்கு இது ஏற்புடையதா, சமூகத்திற்கு நன்மை பயப்பதா என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் என ரவிசங்கர் கூறியுள்ளார்.
கடந்த ஜூன் மாதம் இண்டர்நெட் புரொவைடர்கள் அசோசியேசன் ஆப் இந்தியா, மத்திய அரசின் அதிகாரப்பூர்வ உத்தரவு மற்றும் ஆதரவு இல்லாமல் இந்தியாவில் ஆபாச இணையதளங்களை தடை செய்வது சாத்தியமில்லை என உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. எனவே, இது தொடர்பாக பதிலளிக்கும்படி நீதிமன்றம் தொலைத் தொடர்புத் துறைக்கு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தியாவில் பிஎஸ்என்எல், டாட்டா கம்யூனிகேஷன்ஸ், டாடா டெலிசர்வீசஸ், பார்தி ஏர்டெல்,- எம்டிஎன்எல்,ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்,சிஃபி பிராட்பேண்ட், ஏசியாநெட் ஆகிய நிறுவனங்கள் இணையதள சேவையை வழங்கி வருகிறது.

Popular posts from this blog

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

ஆசிரியர் இல்லாமல் நாம் இல்லை!-முனைவர் மா.தச.பூர்ணாச்சாரி,வழக்கறிஞர், மதுரை.94432 66674.

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் பள்ளிப்பருவம் முக்கியமானது. முதன் முதலாக தாய் தந்தையுடன் சென்று, புத்தாடை அணிந்து, ஆசிரியரை வணங்கி, புத்தரிசி அல்லது நெல்லில் எழுத்தை எழுதத் துவங்கிய நாளை மறக்க இயலாது.வெளி உலகைப் புரிந்து கொள்ளவும், தாய் தந்தையரால் தர முடியாத கல்வி மற்றும் பயிற்சியினை கல்வி மூலமாக ஆசிரியரால்