Skip to main content

தொழிற்கல்வி ஆசிரியர் சம்பளம்நிதித்துறை உத்தரவுக்கு நீதிமன்றம் தடை


தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு சம்பளம் குறைப்பு செய்து, நிதித்துறை பிறப்பித்த உத்தரவுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களை சேர்ந்த, தொழிற்கல்வி ஆசிரியர்கள்
ஏழு பேர், தாக்கல் செய்த மனு:எங்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புகள் இல்லாததால், 5,400 ரூபாய், தர ஊதியத்துடன், 39,100 ரூபாய் பெற, தகுதி உள்ளது. ஆனால், எங்களுக்கு, 4,800 ரூபாய், தர ஊதியத்துடன், 34,800 ரூபாய் வழங்க, கடந்த ஆகஸ்ட் மாதம், நிதித்துறை உத்தரவிட்டுள்ளது.

நாங்கள், 5,400 ரூபாய், தேர்வு நிலை ஊதியம் பெற உரிமை உள்ளது. ஆனால், எங்களுக்கு அது மறுக்கப்படுகிறது. நிதித்துறையின் கடிதத்தை வைத்து, எங்களுக்கு வழங்கப்பட்ட கூடுதல் சம்பளத்தை, திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கைகளை, தலைமை ஆசிரியர்கள் எடுக்கின்றனர்.எனவே, தற்போது வழங்கப்படும் ஊதிய விகிதத்தை குறைக்கவும், வழங்கப்பட்ட பணத்தை பிடித்தம் செய்யவும், தடை விதிக்க வேண்டும். நிதித்துறையின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனுவை, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் விசாரித்தார். சம்பள குறைப்பு செய்த நிதித்துறையின் உத்தரவுக்கு, நீதிபதி சுந்த ரேஷ் தடை விதித்தார். மனுவுக்கு, எட்டு வாரங்களில் பதிலளிக்கும்படி அரசுக்கு உத்தரவிட்டார்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா