இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம் (இக்னோ)தொலைதூரக்கல்வி மூலமாக எம்.எட். படிப்பை வழங்கி வருகிறது.
இந்த ஆண்டு எம்எட் மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு கடந்த
ஆகஸ்ட் மாதம் 17-ம் தேதி நாடு முழுவதும் நடத்தப்பட்டது.
இந்த நிலையில, நுழைவுத்தேர்வு முடிவினை இக்னோ வெளிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் (www.ignou.ac.in) தங்கள் பதிவு எண்ணை குறிப்பிட்டு தேர்வு முடிவை தெரிந்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.