Skip to main content

வங்கிகளில் 6,425 காலிப்பணியிடங்கள்  போட்டித்தேர்வு மூலமாக நிரப்பப்பட இருக்கின்றன.



நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியின் சார்பு வங்கிகளில் 6,425 கிளார்க் பணியிடங்கள் போட்டித்தேர்வு மூலமாக
நிரப்பப்பட இருக்கின்றன.


பட்டதாரிகள்

ஏதேனும் ஒரு பாடத்தில் பட்டம் பெற்றவர்கள் கிளார்க் வேலைக்கு விண்ணப்பிக்கலாம். வயது 18 முதல் 28-க்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி வகுப்பினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் சலுகை அளிக்கப்படும்.

தகுதியுள்ள நபர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். ஆன்லைன் முறையிலான எழுத்துத் தேர்வில், பொது அறிவு, ஆங்கிலம், கணிதம், ரீசனிங், மார்க்கெட்டிங் மற்றும் கணினி அறிவு ஆகிய 5 பகுதிகளில் இருந்து தலா 40 கேள்விகள் வீதம் மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும். இரண்டே கால் மணி நேரத்தில் விடையளிக்க வேண்டும். தவறான கேள்விகளுக்கு மைனஸ் மார்க் உண்டு. அதாவது 4 கேள்விகளுக்குத் தவறாக விடை அளித்தால் ஒரு மதிப்பெண்ணைக் குறைத்துவிடுவார்கள்.

டிசம்பர் மாதம் 9

ஆன்லைன் தேர்வை அடுத்த ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரி வாதவாக்கில் நடத்தத் திட்டமிட்டுள்ளனர். தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில் உள்பட 14 மையங்களில் தேர்வு நடைபெறும். தகுதியுள்ள பட்டதாரிகள் டிசம்பர் மாதம் 9-ம் தேதிக்குள் ஆன்லைனில் (www.sbi.co.in) விண்ணப்பிக்க வேண்டும். தேர்வுக் கட்டணத்தையும் ஆன்லைனிலே செலுத்திவிடலாம். வங்கிகளில் செலான் மூலம் செலுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆன்லைன் தேர்வை அடுத்த ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரி வாதவாக்கில் நடத்தத் திட்டமிட்டுள்ளனர். தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில் உள்பட 14 மையங்களில் தேர்வு நடைபெறும். தகுதியுள்ள பட்டதாரிகள் டிசம்பர் மாதம் 9-ம் தேதிக்குள் ஆன்லைனில் (www.sbi.co.in) விண்ணப்பிக்க வேண்டும். தேர்வுக் கட்டணத்தையும் ஆன்லைனிலே செலுத்திவிடலாம். வங்கிகளில் செலான் மூலம் செலுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கிளார்க் பணிக்குத் தேர்வு செய்யப்படுவோர் ஸ்டேட் வங்கியின் சார்பு வங்கிகளான ஸ்டேட் பேங்க் ஆப் மைசூர், ஸ்டேட் பேங்க் ஆப் திருவாங்கூர், ஸ்டேட் பேங்க் ஆப் பாட்டீயாலா போன்ற வங்கிகளில் ஏதேனும் ஒன்றில் பணியமர்த்தப்படுவார்கள்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு