Skip to main content

வங்கிகளில் 6,425 காலிப்பணியிடங்கள்  போட்டித்தேர்வு மூலமாக நிரப்பப்பட இருக்கின்றன.



நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியின் சார்பு வங்கிகளில் 6,425 கிளார்க் பணியிடங்கள் போட்டித்தேர்வு மூலமாக
நிரப்பப்பட இருக்கின்றன.


பட்டதாரிகள்

ஏதேனும் ஒரு பாடத்தில் பட்டம் பெற்றவர்கள் கிளார்க் வேலைக்கு விண்ணப்பிக்கலாம். வயது 18 முதல் 28-க்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி வகுப்பினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் சலுகை அளிக்கப்படும்.

தகுதியுள்ள நபர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். ஆன்லைன் முறையிலான எழுத்துத் தேர்வில், பொது அறிவு, ஆங்கிலம், கணிதம், ரீசனிங், மார்க்கெட்டிங் மற்றும் கணினி அறிவு ஆகிய 5 பகுதிகளில் இருந்து தலா 40 கேள்விகள் வீதம் மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும். இரண்டே கால் மணி நேரத்தில் விடையளிக்க வேண்டும். தவறான கேள்விகளுக்கு மைனஸ் மார்க் உண்டு. அதாவது 4 கேள்விகளுக்குத் தவறாக விடை அளித்தால் ஒரு மதிப்பெண்ணைக் குறைத்துவிடுவார்கள்.

டிசம்பர் மாதம் 9

ஆன்லைன் தேர்வை அடுத்த ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரி வாதவாக்கில் நடத்தத் திட்டமிட்டுள்ளனர். தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில் உள்பட 14 மையங்களில் தேர்வு நடைபெறும். தகுதியுள்ள பட்டதாரிகள் டிசம்பர் மாதம் 9-ம் தேதிக்குள் ஆன்லைனில் (www.sbi.co.in) விண்ணப்பிக்க வேண்டும். தேர்வுக் கட்டணத்தையும் ஆன்லைனிலே செலுத்திவிடலாம். வங்கிகளில் செலான் மூலம் செலுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆன்லைன் தேர்வை அடுத்த ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரி வாதவாக்கில் நடத்தத் திட்டமிட்டுள்ளனர். தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில் உள்பட 14 மையங்களில் தேர்வு நடைபெறும். தகுதியுள்ள பட்டதாரிகள் டிசம்பர் மாதம் 9-ம் தேதிக்குள் ஆன்லைனில் (www.sbi.co.in) விண்ணப்பிக்க வேண்டும். தேர்வுக் கட்டணத்தையும் ஆன்லைனிலே செலுத்திவிடலாம். வங்கிகளில் செலான் மூலம் செலுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கிளார்க் பணிக்குத் தேர்வு செய்யப்படுவோர் ஸ்டேட் வங்கியின் சார்பு வங்கிகளான ஸ்டேட் பேங்க் ஆப் மைசூர், ஸ்டேட் பேங்க் ஆப் திருவாங்கூர், ஸ்டேட் பேங்க் ஆப் பாட்டீயாலா போன்ற வங்கிகளில் ஏதேனும் ஒன்றில் பணியமர்த்தப்படுவார்கள்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா