Skip to main content

6 முதல் 10-ஆம் வகுப்பு வரை ஆங்கில துணைப் பாடப் புத்தகம்


சமச்சீர் கல்வியின் கீழ் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஆங்கில துணைப் பாடப் புத்தகம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சமச்சீர் கல்வியின் கீழ், தமிழகம் முழுவதும் 1 முதல் 10-
ஆம் வகுப்பு வரை பொதுப்பாடத் திட்டம் 2011-12-ஆம் கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தப் பாடத்திட்டத்தின் கீழ், ஆங்கிலப் பாடத்துக்கு ஒரு புத்தகம் மட்டுமே வழங்கப்படுகிறது.

ஆங்கிலோ இந்தியன், மெட்ரிக், மாநிலப் பாடத்திட்டங்களின் கீழ் மாணவர்களுக்கு ஆங்கில துணைப் பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டு வந்தன. ஆனால், பொதுப் பாடத் திட்டத்தின் கீழ், துணைப் பாடப் புத்தகம் வழங்கப்படவில்லை.

மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் வாசிக்கும் திறனை ஊக்குவிப்பதற்காக மீண்டும் இந்த துணைப் பாடப் புத்தகத்தை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு 10 சிறிய கதைகள் கொண்ட புத்தகமும், 9, 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரேயொரு கதை கொண்ட புத்தகமும் வழங்கப்பட உள்ளது. வாரத்தில் ஒரு நாள் இந்தப் புத்தகத்திலிருந்து மாணவர்களுக்கு ஆசிரியர்கள் வகுப்பு எடுப்பார்கள். இந்தப் புத்தகத்தின் மூலம் ஆங்கிலம் வாசிப்பதில் மாணவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தப் புத்தகத்தைத் தயாரிக்கும் பணிகள் இப்போது தொடங்கியுள்ளன. இதுதொடர்பாக, அரசின் ஒப்புதல் பெறப்பட்டு பாடப்புத்தகங்கள் இறுதிசெய்யப்படும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. 2016-17-ஆம் கல்வியாண்டில் இந்தப் புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்படும் என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு