தமிழகத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்தோர், திருத்தம் கோரி விண்ணப்பித்தோர் பட்டியல் சரி பார்க்கும் பணி நடக்கிறது. ஜன., 5ல், புது பட்டியல் வெளியிடப்படும்' என, தமிழக தலைமை தேர்தல்
அதிகாரி சந்தீப் சக்சேனா கூறியுள்ளார்.
இது தொடர்பாக, அவர் விடுத்து உள்ள அறிக்கையில், '15.66 லட்சம் பேர், வாக்காளர் திருத்தம் கோரி விண்ணப்பித்து உள்ளனர்; 62 ஆயிரம் பேர், புதிதாக பெயர் சேர்க்க விண்ணப்பித்து உள்ளனர். ஜன., 5ம் தேதி, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்' என கூறியுள்ளார்.