Skip to main content

ஆசிரியர் பட்டயப் படிப்பு: 3 மாதங்களுக்குள் புதிய பாடத் திட்டம்


ஆசிரியர் பட்டயப் படிப்புக்கு 3 மாதங்களுக்குள் புதிய பாடத் திட்டம் உருவாக்கப்படும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. தமிழகத்தில் 400-க்கும் அதிகமான ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் 20
ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் ஆசிரியர் பட்டயப் படிப்பைப் படித்து வருகின்றனர்.


மாறி வரும் சூழலுக்கு ஏற்ப, ஆசிரியர் பட்டயப் படிப்புக்கான புதிய பாடத்திட்டத்தை உருவாக்க மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் முடிவு செய்தது.

இதற்காக 120 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, இந்தக் குழுவினர் கேரளம், தில்லி, மகாராஷ்டிரம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்குச் சென்று அங்குள்ள ஆசிரியர் பட்டயப் படிப்பு பாடத்திட்டங்களை ஆய்வு செய்தனர்.

புதிய பாடத்திட்டத்தை உருவாக்குவது தொடர்பாக விரிவுரையாளர்கள், கல்வியாளர்களுக்கான பயிற்சி சென்னையில் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

புதிய பாடத்திட்டம் தொடர்பாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறியது:

கல்வி உரிமைச் சட்டம், இணையப் பாதுகாப்பு, மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைப் புதிய பாடத்திட்டத்தில் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மூன்று மாதங்களுக்குள் ஆசிரியர் பட்டயப் படிப்புக்கான புதிய பாடத்திட்டம் உருவாக்கப்பட்டு, அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆசிரியர் பட்டயப் படிப்புக்கான பாடத்திட்டம் உருவாக்கப்பட்ட நான்கரை ஆண்டுகளுக்குள்ளாகவே அந்தப் பாடத்திட்டத்தை மாற்றியமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு