Skip to main content

+2 மறுகூட்டல் முடிவு இன்று வெளியீடு


 பிளஸ் 2 தனித்தேர்வுக்கு பின், மறு மதிப்பீடு மற்றும் மறுகூட்டல் கேட்டு விண்ணப்பித்த மாணவர்களின் முடிவுகள், இன்று காலை, இணையதளத்தில் வெளியிடப்படுகின்றன. தனித்தேர்வு, செப்டம்பர், அக்டோபரில் நடந்தது.
இதன் முடிவிற்குப் பின், ஏராளமான மாணவ, மாணவியர், மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீடு கேட்டு, தேர்வுத் துறையிடம் விண்ணப்பித்தனர்.
மறு மதிப்பீடு, மறுகூட்டல் பணி முடிந்ததை அடுத்து, மதிப்பெண் மாற்றம் உள்ள மாணவர்களின் பதிவெண், www.student.hse14rtrv.in என்ற இணையதளத்தில், இன்று காலை, 11:00 மணிக்கு வெளியிடப்படுகிறது. மதிப்பெண் மாற்றம் உள்ள மாணவர்கள் மட்டும், வரும், 17ம் தேதி காலை, 11:00 மணிக்கு, சென்னையில் உள்ள தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகத்தில் ஆஜராகி, புதிய மதிப்பெண் சான்றிதழை பெற்றுக்கொள்ள வேண்டும்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா