Skip to main content

28,889 பேருக்கு திருத்திய ஓய்வூதியம்

திருத்திய ஓய்வூதியம் பெற விண்ணப்பிப்பவர்கள்,அனுப்ப வேண்டிய ஆவணங்கள் குறித்த தகவல்களை, மாநில முதன்மை கணக்காயர் அலுவலகம் வெளியிட்டு உள்ளது.இதுகுறித்து, மாநில துணை கணக்காயர்
(ஓய்வூதியம்) ெவளியிட்ட செய்திக்குறிப்பு:
கடந்த, 1988 முதல், 95ம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் ஓய்வு பெற்ற தமிழக அரசு ஊழியர்கள், 60 ஆயிரம் பேர், திருத்திய ஓய்வூதியம் பெறும் வகையில், தமிழக அரசு அரசாணை ஒன்றை ெவளியிட்டது.அதன்படி, சம்பந்தப்பட்ட துறையிடம் இருந்து பெறப்பட்ட, ஓய்வூதியதாரர்களின் கோப்புகள் மீதான, தேவையான ெதளிவுரைகள், தமிழக அரசிடம் இருந்து கிடைத்ததும், திருத்திய ஓய்வூதியத்தை வழங்க உத்தரவுகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தமிழக அரசு, ஒரு நபர் பரிந்துரை யின் பேரில், 100 உத்தரவுகளை, கடந்த ஆண்டு, ஜூலை, 23ம் தேதி ெவளி யிட்டது. இதன் மூலமும். திருத்திய ஓய்வூதியம் தெடார்பான கோப்புகள் வந்து குவிகின்றன.இதனால், அதிக வேலைப்பளு ஏற்பட்ட போதும், சிரமத்திற்கிடையில், ஓய்வூதிய தாரர்கள், திருத்திய ஓய்வூதியம் பெறும் வகையில், துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இதுவரை, 28,889 ஓய்வூதியதாரர்களுக்கு, திருத்தப்பட்ட ஓய்வூதியம் வழங்குவதற்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. விடுபட்ட விவரங்கள் வேண்டி, 2192 கோப்புகள், சம்பந்தப்பட்ட துறை அலுலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. எனவே, தங்கள் கோப்புககளை திரும்ப பெற்றவர்கள்; இனி கோப்புகளை அனுப்புபவர்கள், ஓய்வூதிய கொடுப்பு ஆணை எண், பணிப்பதிவேடு, திருத்திய ஓய்வூதிய விண்ணப்பத்திற்கான முகாந்திரம், பணிப்பதிவேடு கிடைக்காவிட்டால், நான்காவது ஊதியக்குழு அடிப்படையிலான, ஊதிய அட்டவணை ஆகியவற்றை அனுப்ப வேண்டும்.

மேலும், ஓய்வூதியதாரர்களின் விருப்பப்படிவம், இருப்பிட முகவரி, தற்போது ஓய்வூதியம் பெறும், கருவூலம் அல்லது சார் கருவூலத்தின் பெயர் ஆகியவற்றை அனுப்ப வேண்டும்.கூடுதல் விவரங்கள் தேவைப்பட்டால், சென்னை, அண்ணாசாலையில் உள்ள, மாநில முதன்மை கணக்காயர் அலுவலகத்தில், துணை மாநில கணக்காயரை (ஓய்வூதியம்) தொடர்பு கொள்ளலாம்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு