Skip to main content

1,727 டாக்டர் வேலை காலி டிச., 1க்குள் விண்ணப்பிக்கலாம்



அரசு மருத்துவமனைகளுக்கு, 1,727 உதவி டாக்டர்கள் புதிதாக தேர்வு செய்யப்பட உள்ளனர். 'டிச., 1ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்' என,
மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்து உள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில், 2,176 டாக்டர்களை நியமிக்க, மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், போட்டித் தேர்வு நடத்தியது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு, சான்றிதழ் சரி பார்ப்பு பணி நடந்து வருகிறது. இந்த மாத இறுதிக்குள், பணி ஆணை வழங்கப்பட உள்ளது.இந்நிலையில், 36 சிறப்பு பிரிவுகளின் கீழ், 1,727 தற்காலிக உதவி மருத்துவர்களை நியமிக்க, அரசு முடிவு செய்துள்ளது. 'இதில் சேர விரும்புவோர், டிச., 1ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்; மேலும் விவரங்கள் தேவைப்படுவோர், www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்' என, மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

Popular posts from this blog

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

ஆசிரியர் இல்லாமல் நாம் இல்லை!-முனைவர் மா.தச.பூர்ணாச்சாரி,வழக்கறிஞர், மதுரை.94432 66674.

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் பள்ளிப்பருவம் முக்கியமானது. முதன் முதலாக தாய் தந்தையுடன் சென்று, புத்தாடை அணிந்து, ஆசிரியரை வணங்கி, புத்தரிசி அல்லது நெல்லில் எழுத்தை எழுதத் துவங்கிய நாளை மறக்க இயலாது.வெளி உலகைப் புரிந்து கொள்ளவும், தாய் தந்தையரால் தர முடியாத கல்வி மற்றும் பயிற்சியினை கல்வி மூலமாக ஆசிரியரால்