Skip to main content

பகுதிநேர சிறப்பாசிரியர்களுக்கான சிறப்புச்செய்தி (17 / 11 / 2014):



சென்னையில் இன்று (17 / 11 / 2014) தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர்கள்சங்கத்தின் சேர்மன் திரு. சோலை M ராஜா அவர்கள் தலைமையில் சங்கத்தின்முக்கிய நிர்வாகிகள், கல்வி அமைச்சர், முதன்மைக்கல்விச் செயலாளர், SSAதிட்ட இயக்குனர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளைச் சந்தித்து பகுதிநேரசிறப்பாசிரியர்களின் நிலை குறித்து
கலந்துரையாடினர்.
இதில், மாநில அமைப்பாளர் திரு. கு.சேசுராஜா, மாநிலத் துணை அமைப்பாளர்திரு.ஆனந்தராஜ், மாநிலத் தலைவர் திரு.ஜெயச்சந்திர பூபதி, மாநில செயலாளர்திரு. D.ராஜா தேவகாந்த் மற்றும் மாநில பொருளாளர் திரு.ஜான்சன் ஆகியோர்இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.இச்சந்திப்பில் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் முக்கிய நிர்வாகிகள்60க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.கலந்துரையாடலில் நமது முக்கிய கோரிக்கைகள் அனைத்தும் முன்வைக்கப்பட்டன.

இக்கலந்துரையாடலின் முடிவுகள் :

1. மத்திய அரசிடமிருந்து நிதியானது ஒருபகுதி மட்டுமே வந்துள்ளது.முழுத்தொகையும் வந்தவுடன் ஊதிய உயர்வு வழங்கப்படும். ஊதிய உயர்வு ரூ.2000 /- விரைவில் வழங்கப்படும். நிலுவைத்தொகையானது ஏப்ரல் 2014 முதல்கணக்கிட்டு வழங்கப்படும்.

2. மாற்றுப்பணிக்கு, முதன்மைக்கல்வி அலுவலர்கள் சந்திப்பிற்கு ஏற்பாடுசெய்து, அதன்பின் அறிவிப்பு வெளியிடப்படும்.

3. அதனைத் தொடர்ந்து ஊதியம் முழுமையாக ECS முறையில் வழங்குவதற்கு ஏற்பாடுசெய்யப்படும்.

4.பணிநிரந்தரம் குறித்து மத்திய அரசுடன் கலந்து ஆலோசித்து முடிவுசெய்யப்படும்.என்று தெரிவிக்கப்பட்டது.

* * * முக்கிய இணைப்பு ***

இறுதியாக மாண்புமிகு கல்வி அமைச்சர் திரு. கே.சி. வீரமணி அவர்கள் நாளைஅல்லது நாளை மறுநாள் பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஓர் இனிப்பான செய்தி ஒன்றுவந்து சேரும். செய்தித்தாளைப் பாருங்கள். நான் கையெழுத்திட்டு விட்டேன்என்று தெரிவித்தார்.

by
பொன். சங்கர்

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்