Skip to main content

பகுதிநேர சிறப்பாசிரியர்களுக்கான சிறப்புச்செய்தி (17 / 11 / 2014):



சென்னையில் இன்று (17 / 11 / 2014) தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர்கள்சங்கத்தின் சேர்மன் திரு. சோலை M ராஜா அவர்கள் தலைமையில் சங்கத்தின்முக்கிய நிர்வாகிகள், கல்வி அமைச்சர், முதன்மைக்கல்விச் செயலாளர், SSAதிட்ட இயக்குனர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளைச் சந்தித்து பகுதிநேரசிறப்பாசிரியர்களின் நிலை குறித்து
கலந்துரையாடினர்.
இதில், மாநில அமைப்பாளர் திரு. கு.சேசுராஜா, மாநிலத் துணை அமைப்பாளர்திரு.ஆனந்தராஜ், மாநிலத் தலைவர் திரு.ஜெயச்சந்திர பூபதி, மாநில செயலாளர்திரு. D.ராஜா தேவகாந்த் மற்றும் மாநில பொருளாளர் திரு.ஜான்சன் ஆகியோர்இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.இச்சந்திப்பில் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் முக்கிய நிர்வாகிகள்60க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.கலந்துரையாடலில் நமது முக்கிய கோரிக்கைகள் அனைத்தும் முன்வைக்கப்பட்டன.

இக்கலந்துரையாடலின் முடிவுகள் :

1. மத்திய அரசிடமிருந்து நிதியானது ஒருபகுதி மட்டுமே வந்துள்ளது.முழுத்தொகையும் வந்தவுடன் ஊதிய உயர்வு வழங்கப்படும். ஊதிய உயர்வு ரூ.2000 /- விரைவில் வழங்கப்படும். நிலுவைத்தொகையானது ஏப்ரல் 2014 முதல்கணக்கிட்டு வழங்கப்படும்.

2. மாற்றுப்பணிக்கு, முதன்மைக்கல்வி அலுவலர்கள் சந்திப்பிற்கு ஏற்பாடுசெய்து, அதன்பின் அறிவிப்பு வெளியிடப்படும்.

3. அதனைத் தொடர்ந்து ஊதியம் முழுமையாக ECS முறையில் வழங்குவதற்கு ஏற்பாடுசெய்யப்படும்.

4.பணிநிரந்தரம் குறித்து மத்திய அரசுடன் கலந்து ஆலோசித்து முடிவுசெய்யப்படும்.என்று தெரிவிக்கப்பட்டது.

* * * முக்கிய இணைப்பு ***

இறுதியாக மாண்புமிகு கல்வி அமைச்சர் திரு. கே.சி. வீரமணி அவர்கள் நாளைஅல்லது நாளை மறுநாள் பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஓர் இனிப்பான செய்தி ஒன்றுவந்து சேரும். செய்தித்தாளைப் பாருங்கள். நான் கையெழுத்திட்டு விட்டேன்என்று தெரிவித்தார்.

by
பொன். சங்கர்

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு