Skip to main content

சிறுபான்மை மொழி ஆசிரியர் கவுன்சலிங் 13ல் நடக்கிறது



பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு உயர்நிலை, மேனிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள சிறுபான்மை மொழிப்பாடங்களை
நடத்தபட்டதாரி ஆசிரியர்கள் நேரடியாக நியமனம் செய்யப்படுகின்றனர்.
இதற்கான கவுன்சலிங் 13ம் தேதி காலை 11 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் இணையதளம்மூலமாக நடக்கிறது. 

தெலுங்கு மொழியில் கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கும், மலையாள மொழியில் கணக்கு, அறவியல் பாடங்களுக்கும், கன்னட மொழியில் கணக்கு பாடத்துக்கும், உருது மொழியில் கணக்கு, அறிவியல் பாடங்களுக்கும் ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். கவுன்சலிங் நடக்கும்போது, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் ஏற்கெனவே தெரிவு செய்யப்பட்டு ஆணை பெற்றவர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும். கவுன்சலிங்கில் கலந்து கொள்ள தகுதி உடையவர்கள் டிஆர்பி வழங்கிய தெரிவு சான்று, கல்விச் சான்று, உள்ளிட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடம் கொடுக்க வேண்டும்.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்