Skip to main content

10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு இன்று முதல் மாதிரி வினாப் புத்தகங்கள்

10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கான மாதிரி வினாப் புத்தகங்கள் திங்கள்கிழமை (நவ.10) முதல் அந்தந்த மாவட்டங்களில் விநியோகிக்கப்பட உள்ளன.

இதற்காக மொத்தம் 7 லட்சத்துக்கும் அதிகமான மாதிரி வினாப் புத்தகங்கள்
அச்சிடப்பட்டுள்ளன.

தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில், 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில், வினா வங்கி, மாதிரி வினா ஏடுகள், தீர்வுப் புத்தகங்கள் குறைவான விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

நிகழாண்டும் பிளஸ் 2 மாணவர்களுக்கு வினா வங்கி, மாதிரி வினாப் புத்தகங்கள், தீர்வுப் புத்தகங்கள் தமிழ் வழி, ஆங்கில வழியில் ஒவ்வொரு பாட வரிசைக்கும் ரூ.25 முதல் ரூ.95 வரையில் விற்பனை செய்யப்படும்.

10-ஆம் வகுப்புக்கு 3 புத்தகங்களைக் கொண்ட ஒரு தொகுதியின் விலை ஆங்கில வழிப் புத்தகங்கள் ரூ.200-க்கும், தமிழ் வழி புத்தகங்கள் ரூ.205-க்கும் விற்பனை செய்யப்பட உள்ளன.



விற்பனை மையங்களின் விவரம்

1.சென்னை - அரசு மேல்நிலைப் பள்ளி, எம்.எம்.டி.ஏ. காலனி, அரும்பாக்கம், ஜெய்கோபால் கரோடியா மகளிர் மேல்நிலைப் பள்ளி, சைதாப்பேட்டை, இ.எல்.எம். ஃபேப்ரிஷியஸ் மேல்நிலைப் பள்ளி, புரசைவாக்கம், எம்.சி.சி. மேல்நிலைப் பள்ளி, சேத்துப்பட்டு, ஜெய்கோபால் கரோடியா மகளிர் மேல்நிலைப் பள்ளி, சூளைமேடு.

2. காஞ்சிபுரம் - அரசு மேல்நிலைப் பள்ளி, பீர்க்கங்கரணை, சென்னை-34.

3. திருவள்ளூர் - ஆர்.எம். ஜெயின் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளி, திருவள்ளூர்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா