Skip to main content

10, 12ம் வகுப்பு பாடங்களை டிச. 7க்குள் முடிக்க உத்தரவு.

பத்து மற்றும் பிளஸ்2 வகுப்புகளுக்கான மொத்த பாடத்திட்டங்களையும்டிச.7க்குள் முடிக்குமாறு கல்வித்துறை கட்டாயப்படுத்துவதால் ஆசிரியர்கள் திணறுகின்றனர்.
தமிழகத்தில் சமச்சீர் கல்வி திட்டம் வந்தபின், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ்2 மாணவர்களுக்கு ஒரே மாதிரியான வினாத்தாள் அச்சிட்டு காலாண்டு மற்றும்
அரையாண்டு தேர்வுகளை பொதுத் தேர்வாக நடத்தும் முறை இரண்டு ஆண்டுகளாக அமலில் உள்ளது.

தற்போது டிச.10ம் தேதி பிளஸ்2வுக்கும், 12ம் தேதி பத்தாம் வகுப்புக்கும் அரையாண்டு தேர்வு துவங்குகிறது. இதனால், டிச.7க்குள் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்2 மொத்த பாடங்களையும் நடத்தி முடிக்க ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.சிலபள்ளிகளில் காலிப் பணியிடம்,உடல்நல பாதிப்பு, கர்ப்ப கால மருத்துவ விடுப்பு போன்ற காரணங்களால் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. ஜூன் மாதம் பள்ளி துவங்கிய நிலையில், டிசம்பர் முதல் வாரத்துக்குள் ஆறே மாதங்களில் முழு பாடங் களையும் நடத்திமுடிப்பது ஆசிரியர்களுக்கு சிரமமாக உள்ளது. சில பள்ளிகளில் ஆசிரியர்கள் இயந்திரகதியில் வேகமாக பாடங் களை நடத்தி முடிப்பதாக மாணவர்கள் மத்தியில்புகார் நிலவுகிறது.

இதுகுறித்து தலைமை ஆசிரியர் ஒருவர் கூறுகையில், “அரையாண்டு தேர்வுக்கு முன்னதாக பத்தாம் வகுப்பு, பிளஸ்2 வகுப்புக்கு மொத்த பாடங்களை முடித்தால் மட்டுமே, ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் அவர் களை திருப்பு தேர்வு, முன்மாதிரி தேர்வுநடத்தி, பொதுத்தேர்வுக்கு தயார்படுத்த முடியும். அவகாசம் குறைவாக உள்ளதால், காலையில் ஒரு மணி நேரம், மாலையில் ஒரு மணி நேரம் என கூடுதல் நேரம் வகுப்பு நடத்தப்படுகிறது.சில நேரங்களில் பாடங்களை விரைவாக நடத்த வேண்டிய நெருக்கடியும் ஆசிரியர்களுக்குஏற்படுகிறது. காலாண்டு தேர்வுக்குள் 65 சதவீதம், அரையாண்டு தேர்வுக்குள் 35 சதவீதம் என கல்வித்துறையின் அட்டவணையை பின்பற்றினால், இந்த சிரமம் ஏற்படாது’’ என்றார். குறைந்தபட்சம் 10 மற்றும் பிளஸ்2 வகுப்புகளுக்கு மட்டுமாவது ஆசிரியர்கள் பற்றாக்குறை யின்றி நியமிக்க கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியர்களும், பெற்றோரும் எதிர்பார்க்கின்றனர்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு