Skip to main content

TNPSC GROUP 4 GK NOTES

இந்திய ஆறுகள்


தீபகற்ப இந்திய ஆறுகள்

இவை பெரும்பாலும் மேற்கு மலைத்தொடரில் உற்பத்தியாகிக் கிழக்கு நோக்கிப் பாய்ந்து வங்கக் கடலை அடைகின்றன.

மேற்கு மலைத்தொடரில் மழை பெய்யும்பொழுது மட்டுமே இவற்றில் நீர்
வளம் இருக்கும். இவை புறதீபகற்ப நதிகளைப் போல ஜீவா நதிகள் அல்ல.

கோதாவரி:

1450 கி.மீ நீளம்.

மகாராஸ்டிரா மாநிலம் நாசிக் அருகே திரியம்பகத்தில் தோன்றி ஆந்திராவில் பாய்ந்து வங்கக்கடலில் கலக்கிறது.

இந்திராவதி, வைன்கங்கா, மஞ்சித நதி முக்கிய துணை நதிகள்.

கிருஷ்ணா:

1290 கி.மீ நீளம்.

மகாராஸ்டிரா மாநிலம் மேற்குத்தொடர்ச்சி மலையின் மகாபலேஸ்வரில் தோன்றி ஆந்திரா வழி பாய்ந்து வங்கக்கடலில் கலக்கிறது.

துணையாறு :துங்கபத்திரா

நர்மதை:

1290 கி.மீ நீளம்.

மைகான் மலைத்தொடரில் அமர்கண்ட் சிகரத்தில் தோன்றி விந்திய சாத்பூரா மலைகளுக்கு இடையே ஓடி அரபிக் கடலில் கலக்கிறது.

மகாநதி:

890 கி.மீ நீளம்.

அமர்காண்டக் சிகரத்தின் தெற்கில் சிகாவயில் தோன்றி மத்தியப்பிரதேசம், ஒரிசா வழி பாய்ந்து கட்டாக் அருகே கடலில் கலக்கிறது.

காவிரி:

760 கி.மீ நீளம்.

குடகில் பிறந்து கர்நாடகம், தமிழ்நாடு வழிப்பாய்ந்து காவிரிப்பூம்பட்டினம் அருகே கடலில் கலக்கிறது.

துணையாறுகள்: பவானி, நொய்யல், அமராவதி, கபினி

தபதி:

720 கி.மீ நீளம்.

மத்தியப்பிரதேசம் பேதுல் பகுதியில் தோன்றி அரபிக்கடலில் கலக்கிறது.

தாமோதர்:

530 கி.மீ நீளம்.

சோட்டாநாக்பூர் டாரு சிகரத்தில் தோன்றி ஹூக்ளியில் கலக்கிறது.

தீபகற்ப இந்தியாவில் மேற்கு நோக்கிப் பாய்ந்து அரபிக்கடலில் கலக்கும் நதிகள் நர்மதை, தபதி ஆகும்.

மேற்கு மலைத்தொடரில் மேற்குச்சரிவில் இறங்கி அரபிக்கடலில் கலக்கும் சிற்றாறுகள் பல உள்ளன. மாண்டவி, ஜாவேரி நதிகள் கோவா பகுதியில் அரபிக்கடலில் கலக்கின்றன.

புற தீபகற்ப இந்திய ஆறுகள்:

இமயமலையில் தோன்றி பாய்கின்றன. இவை வற்றாத ஜீவ நதிகள்.

சிந்து:

3000 கி.மீ நீளம்.

பெரும்பாலும் பாகிஸ்தானில் பாய்கிறது.

திபெத்தில் தோன்றி அரபிக்கடலில் கலக்கிறது.

இதன் துணையாறு சட்லெஜ் மட்டுமே இந்தியாவில் பாய்கிறது.

இதன் குறுக்கே பக்ரா-நங்கல் அணை கட்டப்பட்டுள்ளது.

சட்லெஜ் 1440கி.மீ நீளம். கைலாச மலையில் தொடங்குகிறது.

பிரம்மபுத்திரா:

2900 கி.மீ நீளம்.

கைலாச மலை, மானசரோவரில் தோன்றி, தெற்குத்திபெத்தில் 1250 கி.மீ ஓடி இமய மலையின் வடக்கிழக்கு பகுதியான அஸ்ஸாம் மலைக் குன்றுகள் வழியாக பாய்ந்து பங்களாதேஷில் புகுந்து கங்கையின் கிளை நதிகளில் இணைந்து வங்கக்கடலில் கலக்கிறது.

இதில் வெள்ளப்பெருக்கு அதிகம் ஏற்பட்டு அஸ்ஸாம், பீஹார் பகுதிகள் பாதிப்படைகின்றன.

கங்கை:

2510 கி.மீ நீளம்.

இமயமலையில் கங்கோத்ரி அருகே உருவாகி கோமுக்கியில் உற்பத்தியாகி ஹரித்துவாரில் தரையிறங்கி உத்திரப்பிரதேசம், பீஹார், வங்காள மாநிலம் வழியே பாய்ந்து வங்காள விரிகுடாக் கடலை அடைகிறது.

கிழக்கு நோக்கி பாய்ந்து தெற்கு நோக்கித் திரும்பி இரு கிளையாகி ஒன்று வங்க தேசத்திற்கும் மற்றது ஹூக்ளி எனும் பெயரில் மேற்கு வங்கத்திலும் கடலில் சேர்கிறது.

முக்கிய துணையாறுகள்: யமுனை, சோன், கோமதி, கர்கா, சாரதா, கண்டக், கோசி

கங்கைக்கு இணையாக 600 கி.மீ ஓடும் யமுனை அலகாபாத்தில் அதனுடன் கலக்கிறது.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்