Skip to main content

வேலைவாய்ப்பு சார்ந்த புதிய பாடத்திட்டங்களை அறிமுகம் செய்ய பாரதியார் பல்கலை திட்டம்.

தொலைமுறை கல்விக்கூடத்தில் வரும் கல்வியாண்டுகளில், பல்வேறு வேலைவாய்ப்பு சார்ந்த புதிய பாடத்திட்டங்களை அறிமுகம் செய்ய பாரதியார் பல்கலை திட்டமிட்டுள்ளது.
பாரதியார் பல்கலையின் தொலைமுறை கல்வி கூடத்தில் இளங்கலை,
முதுகலை, எம்.பி.ஏ., பாடப்பிரிவுகள், சான்றிதழ், எம்.சி.ஏ., பி.எட்., எம்.எட்., என, 200க்கும் மேற்பட்ட பாடப்பிரிவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலுள்ள 350 கல்வி மையங்களில், 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். தொலைமுறை கல்வி முறையில், நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை, கடந்த ஜூலை மாதம் முதல் நடந்து வருகிறது; வரும் 31ம் தேதி நிறைவடைகிறது. இதில், வேலைவாய்ப்பு படிப்புகளுக்கு மாணவர்கள் ஆர்வமுடன் விண்ணப்பித்து வருகின்றனர். எனவே, பல்வேறு வேலைவாய்ப்புகள் சார்ந்த புதிய பாடத்திட்டத்தை அறிமுகம் செய்ய பாரதியார் பல்கலை திட்டமிட்டுள்ளது.பாரதியார் பல்கலையின் தொலைமுறை கல்விக்கூட இயக்குனர் கோவிந்தராஜ் கூறியதாவது:சமீபத்தில் தொலைமுறை கல்விக்கூட படிப்புகளுக்கு மாணவர்கள் இடையே மிகுந்த ஆர்வம் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, எம்.பி.ஏ., லாஜிஸ்டிக் அண்ட் சப்ளை செயின் மேனேஜ்மென்ட், ஹோட்டல் மேனேஜ்மென்ட், ஹாஸ்பிட்டல் மேனேஜ்மென்ட் ஆகிய தொழிற்படிப்புகளில் மாணவர்கள் அதிகம் சேர்க்கை புரிந்து வருகின்றனர். தவிர, ஆங்கில இலக்கியம், உளவியல், கம்ப்யூட்டர் அறிவியல், இதழியல், கணிதம் மற்றும் அடிப்படை அறிவியல் பாடங்களுக்கும் அதிகளவில் விண்ணப்பங்கள் வருகின்றன. வரும் கல்வியாண்டுகளில் தொலைமுறை கல்விக்கூட மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு, யு.ஜி.சி., வழிகாட்டுதலின்படி, பல்வேறு வேலை வாய்ப்புகள் சார்ந்த புதிய பாடத்திட்டங்களை அறிமுகம் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

உயர்கல்வி முறையில் சீர்திருத்தம்!பல்கலைக்கழக மானியக்குழு துணை தலைவர் தேவராஜ் சமீபத்தில் தனியார் கல்லுாரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில், "புதிதாக அமைந்துள்ள மத்திய அரசு உயர்கல்வி முறையில் சீர்திருத்தம் கொண்டுவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளின் கல்வி முறையில் மாற்றம்செய்ய யு.ஜி.சி., நடவடிக்கை எடுத்துவருகிறது. அதில், தொழில்சார்ந்த திறமைகளை வெளிப்படுத்தும் பாடங்கள் அறிமுகப்படுத்தப்படும்" எனக் கூறியது குறிப்பிடத்தக்கது.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு