Skip to main content

கணினி பயிற்றுனர் பணிக்குபதிவு மூப்பு பட்டியல் வெளியீடு


               பள்ளி கல்வித் துறையில் காலியாக உள்ள கணினி பயிற்றுனர் பணிக்கான பதிவு மூப்பு பட்டியல் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து கலெக்டர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு;தமிழக பள்ளி கல்வித்துறையில் காலியாக உள்ள 652
தொழிற்கல்வி கணினி பயிற்றுநர் பணி காலியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நிரப்பப்பட உள்ளது. இதற்காக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையில் பதிவு மூப்பு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

             இப்பணிக்கு பி.எஸ்சி., கணினி அறிவியல் அல்லது பி.சி.ஏ., அல்லது பி.எஸ்சி., தகவல் தொழில் நுட்பத்துடன் பி.எட்., முடித்திருக்க வேண்டும்.முன்னுரிமை பிரிவில் பதிவு செய்துள்ள அனைத்து பதிவுதாரர்களும், முன்னுரிமையற்ற பிரிவில் எஸ்.டி., பிரிவினர் 3.9.2011 வரையிலும், எஸ்.சி.,அருந்ததியினர் 20.12.2010 வரையிலும், பி.சி., முஸ்லிம் 17.8.2009 வரையிலும், எஸ்.சி.,-எம்.பி.சி., பி.சி., உள்ளிட்ட இதர பிரிவினர் 22.8.2008 வரையிலும் பதிவு செய்துள்ளவர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கான பதிவு மூப்பு பட்டியல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக விளம்பர பலகையில் ஒட்டப்பட்டுள்ளது. இப்பட்டியலில் தங்கள் பெயர் இடம் பெற்றுள்ளதா என்பதை வரும் 31.10.2014ம் தேதிக்குள் நேரில் சென்று உறுதி செய்துக் கொள்ள வேண்டும்.

            பட்டியியலில் பெயர் இல்லாதவர்கள் அசல் வேலை வாய்ப்பு அலுவலக அடையாள அட்டையுடன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை நேரில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு