Skip to main content

கணினி பயிற்றுனர் பணிக்குபதிவு மூப்பு பட்டியல் வெளியீடு


               பள்ளி கல்வித் துறையில் காலியாக உள்ள கணினி பயிற்றுனர் பணிக்கான பதிவு மூப்பு பட்டியல் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து கலெக்டர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு;தமிழக பள்ளி கல்வித்துறையில் காலியாக உள்ள 652
தொழிற்கல்வி கணினி பயிற்றுநர் பணி காலியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நிரப்பப்பட உள்ளது. இதற்காக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையில் பதிவு மூப்பு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

             இப்பணிக்கு பி.எஸ்சி., கணினி அறிவியல் அல்லது பி.சி.ஏ., அல்லது பி.எஸ்சி., தகவல் தொழில் நுட்பத்துடன் பி.எட்., முடித்திருக்க வேண்டும்.முன்னுரிமை பிரிவில் பதிவு செய்துள்ள அனைத்து பதிவுதாரர்களும், முன்னுரிமையற்ற பிரிவில் எஸ்.டி., பிரிவினர் 3.9.2011 வரையிலும், எஸ்.சி.,அருந்ததியினர் 20.12.2010 வரையிலும், பி.சி., முஸ்லிம் 17.8.2009 வரையிலும், எஸ்.சி.,-எம்.பி.சி., பி.சி., உள்ளிட்ட இதர பிரிவினர் 22.8.2008 வரையிலும் பதிவு செய்துள்ளவர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கான பதிவு மூப்பு பட்டியல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக விளம்பர பலகையில் ஒட்டப்பட்டுள்ளது. இப்பட்டியலில் தங்கள் பெயர் இடம் பெற்றுள்ளதா என்பதை வரும் 31.10.2014ம் தேதிக்குள் நேரில் சென்று உறுதி செய்துக் கொள்ள வேண்டும்.

            பட்டியியலில் பெயர் இல்லாதவர்கள் அசல் வேலை வாய்ப்பு அலுவலக அடையாள அட்டையுடன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை நேரில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா