Skip to main content

'வண்ண வாக்காளர் அடையாள அட்டை எல்லோருக்கும் கிடைக்குமா' : தேர்தல் அதிகாரி பதில்

'எல்லா வாக்காளர்களுக்கும் வண்ண அடையாள அட்டை வழங்கப்படுமா' என்ற அரசியல் கட்சிகளின் கேள்விக்கு, தேர்தல் அதிகாரி பதிலளித்தார். மதுரையில் வாக்காளர் பட்டியல் தொடர்பாக, தேர்தல் பார்வையாளர் வெங்கடேசன் தலைமையில், சர்வ கட்சி நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை
கூட்டம் நடந்தது.
தி.மு.க., நிர்வாகிகள் போஸ், ஜவகர், காங்., மாவட்ட தலைவர்கள் சேதுராமன், விஜயபாஸ்கர் மற்றும் தே.மு.தி.க., கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் பலர் பங்கேற்றனர். தி.மு.க.,வினர் கூறுகையில், ''வாக்காளர் பட்டியலில் ஒருவரது பெயர் இரு இடங்களில் பதிவாகிறது' என்றனர். இதற்கு பதிலளித்த அதிகாரி, 'இதனை உள்ளூர் அதிகாரிகள் சரிசெய்வர். வாக்காளர் சேர்க்கை, நீக்கம், திருத்தம் தொடர்பான விஷயங்களை கூறுங்கள்,' என்றார். காங்., நகர தலைவர் சேதுராமன், ''வாக்காளர் பட்டியல், பிற்சேர்க்கை என பிரித்து தருகின்றனர். ஒன்றாக சேர்த்து ஒரே நேரத்தில் வழங்க வேண்டும்'' என்றார். தெற்கு மாவட்ட தலைவர் விஜயபிரபாகர், ''மதுரை மாவட்டத்தில் 2700க்கும் மேற்பட்ட ஓட்டுச்சாவடிகள் உள்ளன. அவற்றின் பெயர் ஆங்கிலத்தில் உள்ளதை தமிழில் தரவேண்டும். தற்போது வாக்காளர்களுக்கு வண்ண அடையாள அட்டை வழங்கப்படுகிறது. ஏற்கனவே வாங்கியவர்கள் தொலைந்து போயிருந்தால் மீண்டும் விண்ணப்பிக்கின்றனர். இதுபோல பழைய அட்டை பெற்றவர்களுக்கும் புதிய வண்ண அட்டை வழங்கப்படுமா? வாக்காளர் பட்டியல் தொடர்பாக மாவட்ட அளவில் பிரச்னைகள் ஏதுமில்லை', என்றார்.

இதற்கு பதிலளித்த அதிகாரி, 'புதிதாக வரும் ஜனவரி வரை சேர்க்கப்படுவோருக்கே வண்ண அடையாள அட்டை வழங்கப்படும். பழைய அட்டை பெற்றவர்களுக்கு காலப்போக்கில் வழங்கப்படலாம், என்றார்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு