Skip to main content

தமிழ் பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமிக்க நடவடிக்கை : பி.பி.எம்.பி., கல்வி நிலைக்குழு தலைவர் உறுதி:



பெங்களூரு தமிழ் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று, சங்க காமராஜர் உயர்நிலைப் பள்ளி, கல்லூரிகளில் உடனடியாக ஆசிரியர்களை நியமிக்கநடவடிக்கை எடுக்கப்படும்,'' என, பி.பி.எம்.பி., கல்வி நிலைக்குழு
தலைவர் தன்ராஜ் தெரிவித்தார்.
தமிழ் சங்கம் : பெங்களூரு தமிழ் சங்கத்தின், 102வது திருமண மேடை நேர்காணலை, பி.பி.எம்.பி., கல்வி நிலைக்குழு தலைவர் தன்ராஜ், அவரது மனைவி பிரதிபா ஆகியோர், குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர். இருவருக்கும், தமிழ் சங்கம் சார்பில் சால்வை, மாலை அணிவித்து கவுரவிக்கப்பட்டனர்.
நிகழ்ச்சியில், தன்ராஜ் பேசியதாவது: பி.பி.எம்.பி., கல்வி நிலைக்குழு தலைவராக பொறுப்பேற்ற உடனேயே, மாநகராட்சியிலுள்ள பள்ளிகள், கல்லூரிகள், ஆசிரியர்கள், மாணவர்களுக்கான வசதிகள் பற்றியும், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைவிற்கான காரணம் பற்றியும் ஆராய்ந்தேன். அவற்றை நீக்க, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றி அறிந்து கொண்டேன். அதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

தாய் வீடு : தமிழ் பள்ளிகளில், தமிழ் ஆசிரியர்களை நிரப்புவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். பெங்களூரு தமிழ் சங்கம், நம் அனைவருக்கும் தாய் வீடு போன்றதாகும். ஆகவே, தாய் செய்யும் கடமையை, சங்கம் செய்யும். நானும், பெங்களூரு தமிழ் சங்கத்துக்கும், தமிழர்களுக்கும் வேண்டிய உதவிகளை, என் கடமையாக ஆற்றுவேன்.
பெங்களூருவிலுள்ள பல அமைப்புகளுக்கு, அரசியல் பலம் இருப்பதால், அவர்களின் தடைகள் சாதாரணமாக நீக்கப்படுகின்றன. அதுபோன்று, நாமும் அரசியல் பலம் பெற வேண்டும். அதற்கு தமிழர்கள் வாழும் பகுதிகளில், தங்களது சார்பாளர்களாக, தமிழர்களை மாநகராட்சியிலும், சட்டசபையிலும் தேர்வு செய்ய வேண்டும்.

மாநாடு : மேலும், 2015 மார்ச்சில் நடக்கவுள்ள, கர்நாடக தமிழர்களின் மாநாட்டை சிறப்பாக நடத்தி, தமிழர்களின் ஒற்றுமையையும், வலிமையையும் காட்ட முனைவோம்.
நம் மாநகராட்சி மன்ற உறுப்பினர்களை ஒன்றிணைத்து, திருவள்ளுவர் ஊர்வலத்தை, எப்பொழுதையும் விட சிறப்பாக நடத்த வேண்டும். நாம் ஒன்று பட்டு செயல்பட்டால், எதிர்பார்க்கும் வெற்றிகளை பெற முடியும். புதிய நிர்வாகிகளுக்கு, என் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு, அவர் கூறினார். பெங்களூரு தமிழ் சங்க தலைவர் தாமோதரன், செயலர் தரன், துணைத் தலைவர் தாமோதரன், பொருளாளர் சம்பத், திருமண மேடை பொறுப்பாளர் கோபிநாத், துணை செயலர் பாரி ஆகியோர் பங்கேற்றனர்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு