Skip to main content

அஞ்சல் துறை சார்பில் ஓவியப் போட்டி: பள்ளி மாணவர்கள் பங்கேற்கலாம்


அஞ்சல் துறை சார்பில் நடைபெறும் ஓவியப் போட்டியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்கலாம் என தமிழக அஞ்சல் வட்டம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அஞ்சல் வட்டம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக அஞ்சல் வட்டம் சார்பில் ஓவியப் போட்டி நடைபெறவுள்ளது. தமிழக
அஞ்சல் வட்ட கட்டடத்தின் நூற்றாண்டுக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, நவம்பர் 9-ஆம் தேதி ஓவியப் போட்டி நடத்தப்படுகிறது.

போட்டியில் 10 முதல் 15 வயதுக்குள்பட்ட பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்கலாம்.

உங்கள் அருகில் இருக்கும் அஞ்சல் நிலையங்கள், சென்னை மாநகரிலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டடங்கள் ஆகியவற்றை கருப்பொருளாகக் கொண்டு ஓவியங்கள் வரையப்பட வேண்டும்.

போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் ஓவியம் வரைவதற்குத் தேவையான எழுதுபொருள்களை உடன் எடுத்து வர வேண்டும். ஓவியப் போட்டியில் வெற்றி பெறும் நபர்களுக்கு குழந்தைகள் தினத்தன்று பரிசுகள் அளிக்கப்படும்.

எத்திராஜ் சாலையிலுள்ள தமிழ்நாடு அஞ்சல் வட்ட அலுவலகத்தில், காலை 10 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை போட்டி நடைபெறும்.

இதில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் விண்ணப்பத்தில் முழு விவரங்களைக் குறிப்பிட்டு, நவம்பர் 5-ஆம் தேதிக்குள் அளிக்க வேண்டும்.

ஓவியப் போட்டி தொடர்பான கூடுதல் விவரங்களைத் தமிழக அஞ்சல் வட்ட அலுவலகம் மூலம் அறிந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular posts from this blog

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

ஆசிரியர் இல்லாமல் நாம் இல்லை!-முனைவர் மா.தச.பூர்ணாச்சாரி,வழக்கறிஞர், மதுரை.94432 66674.

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் பள்ளிப்பருவம் முக்கியமானது. முதன் முதலாக தாய் தந்தையுடன் சென்று, புத்தாடை அணிந்து, ஆசிரியரை வணங்கி, புத்தரிசி அல்லது நெல்லில் எழுத்தை எழுதத் துவங்கிய நாளை மறக்க இயலாது.வெளி உலகைப் புரிந்து கொள்ளவும், தாய் தந்தையரால் தர முடியாத கல்வி மற்றும் பயிற்சியினை கல்வி மூலமாக ஆசிரியரால்