Skip to main content

உதவிப் பேராசிரியர் நேரடி நியமனம்: இறுதி மதிப்பெண் பட்டியல் வெளியீடு.



உதவிப் பேராசிரியர் காலிப் பணியிட நேரடி நியமனத்துக்கான இறுதிமதிப்பெண் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.) வெளியிட்டுள்ளது.
ஆங்கிலம், தாவரவியல், விலங்கியல், கடல்வாழ் உயிரின வளர்ப்பு ஆகிய
நான்கு துறை உதவிப் பேராசிரியர் பணிக்கான இந்த இறுதி மதிப்பெண் பட்டில் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் இடம்பெற்றுள்ளது.அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 1093 உதவிப் பேராசிரியர் காலிப் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பும் பணியை டி.ஆர்.பி. மேற்கொண்டு வருகிறது.கல்வித் தகுதி, பணி அனுபவம், நேர்முகத் தேர்வு ஆகிய மூன்று நிலைகளில் பெறப்படும் மதிப்பெண்களின் அடிப்படையில் இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது.அதன்படி ஆங்கிலம், தாவரவியல், விலங்கியல், கடல்வாழ் உயரின வளர்ப்பு ஆகிய நான்கு பாடங்களுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு இறுதிக் கட்டமான நேர்முகத் தேர்வு அக்டோபர் 13-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை நடத்தப்பட்டது.

இவர்களுக்கான இறுதி மதிப்பெண் பட்டியல் இப்போது வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் இந்த நான்கு பாடங்களுக்கான இறுதித் தேர்வுப் பட்டியல் வெளியிடப்படும் எனவும் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா