Skip to main content

கம்ப்யூட்டர் ஆசிரியர் பணிக்கு பதிவுமூப்பு அறிவிப்பு


              ஆசிரியர் தேர்வு வாரியத்தின் கம்ப்யூட்டர் ஆசிரியர் பணியிடத்திற்கு மாநில பதிவுமூப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
           இப்பணிக்கு பி.எட்., படிப்புடன் பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது பி.சி.ஏ., அல்லது பி.எஸ்சி., தகவல் தொழில்நுட்பம் தேர்ச்சி பெற்றிருக்க
வேண்டும். 1.7.2014 அன்று 57 வயதுக்குள் இருக்க வேண்டும்.
           முன்னுரிமைதாரர்: எஸ்.சி., அருந்ததியினர் பொது 31.1.2011 வரை, எஸ்.சி., பொது 3.9.2011 வரை, எம்.பி.சி.,பொது 3.9.2011, பி.சி.,பொது 3.9.2011, பி.சி.,பெண்கள் 15.10.2012 (ஆதரவற்ற விதவை), பி.சி.,முஸ்லிம் பொது 19.3.2013, பகிரங்க போட்டியாளர் பொது 28.9.1988 வரை.
            மாற்றுத்திறனாளிகள்: எஸ்.சி., பெண்கள் 13.9.2014, எஸ்.சி.,பொது 29.9.2014, எம்.பி.சி.,பெண்கள் 29.9.2014, எம்.பி.சி.,பொது 26.9.2014, பி.சி.,பெண்கள் 29.9.2014, பி.சி.,பொது 19.3.2014, பி.சி.,முஸ்லிம் பொது 25.8.2014, பகிரங்க போட்டியாளர் பொது 20.8.2013 வரை.
முன்னுரிமை இல்லாதவர்: எஸ்.டி. பொது 3.9.2011, எஸ்.சி.அருந்ததியினர் பொது 20.12.2010, எஸ்.சி.,பொது 24.4.2008, பி.சி.,பொது 23.2.2007, எம்.பி.சி.,பொது 21.8.2008, பி.சி.முஸ்லிம் பொது 17.8.2009, பகிரங்க போட்டியாளர் பொது 22.8.2008 வரை பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
தகுதியுள்ளவர்கள் தங்கள் கல்விச்சான்று, வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டையுடன் மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு அக்.,30ம் தேதி, காலை 11 மணிக்கு நேரில் வந்து சரிபார்த்துக் கொள்ளலாம் என, உதவி இயக்குனர் முருகேசன் தெரிவித்துள்ளார்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு