சி.பி.எஸ்.இ., பள்ளிகள் துவங்க, பள்ளிக்கல்வி இயக்குனரின் ஒப்புதல் பெற வேண்டும் என்ற, புதிய உத்தரவுக்கு, பொதுக்கல்வி வாரிய கூட்டத்தில், ஒப்புதல் அளிக்கப்பட்டது. சி.பி.எஸ்.இ., பள்ளிகளை, தமிழக அரசின்
கட்டுக்குள் கொண்டு வரும் வகையில், கல்வி விதிமுறைகளில், சில திருத்தங்களை கொண்டு வந்து, தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி, தமிழகத்தில், சி.பி.எஸ்.இ., பள்ளி துவங்க வேண்டும் எனில், பள்ளிக்கல்வி இயக்குனரின் ஒப்புதல் பெற வேண்டியது அவசியம் என, விதிமுறையில் திருத்தம் கொண்டுவந்து, தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில், பள்ளிக்கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் தலைமையில், நேற்று முன்தினம், சென்னையில் நடந்த பொதுக்கல்வி வாரிய கூட்டத்தில், சி.பி.எஸ்.இ., பள்ளி தொடர்பான விதிமுறை திருத்தத்திற்கு, ஒப்புதல் அளிக்கப்பட்டது.
'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை, www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு