Skip to main content

மானியத்துடன் சோலார் மோட்டார் திட்டம்


மத்திய, மாநில அரசுகளின், 80 சதவீத மானியத்துடன், 'சோலார்' சக்தியில் இயங்கும் மோட்டார் பொருத்தும் திட்டத்துக்கான ஆய்வு பணியில் தாமதம்
ஏற்படுவதால், விவசாயிகள் ஏமாற்றத்துடன் காத்திருக்கின்றனர்.



விவசாய கிணறுகளுக்கு, அரசு மானியத்துடன் சூரிய ஒளியில் இயங்கும் மோட்டார் பொருத்தும் திட்டம், கடந்த நிதியாண்டில் அறிவிக்கப்பட்டது. தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தில் 50 சதவீதம்; தமிழக அரசின் எரிசக்தி திறன் மேம்பாட்டு அமைப்பில் இருந்து 30 சதவீதம் என, 80 சதவீத மானியம் கொண்ட இத்திட்டத்தில் பயனாளிகள், 20 சதவீதம் பங்களிப்பு செலுத்த வேண்டும். ஆழ்குழாய் கிணறுகளுக்கு மோட்டார் பொருத்த, பயனாளிகள் 1.04 லட்சம் ரூபாயும், திறந்தவெளி கிணறுகளுக்கு 1.17 லட்சம், நீர்தேக்க தொட்டிகளுக்கு 1.34 லட்சம் பங்களிப்பு செலுத்த வேண்டும். திருப்பூர் மாவட்டத்தில், 200 பேர் விண்ணப்பித்தனர். கடந்த நிதியாண்டில், 120 மோட்டார்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தன. 120 பயனாளிகளும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

விண்ணப்பித்து பல மாதங்களாகிய நிலையில், இதுவரை மாவட்ட அளவில் ஒரே ஒரு ஆழ்குழாய் கிணற்றுக்கும், ஒன்பது திறந்தவெளி கிணறுகளுக்கு மட்டும் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. வேளாண் பொறியியல் துறையினரும், ஒப்பந்தம் செய்துள்ள நிறுவனத்தினரும், ஆய்வை முடிக்க தாமதிப்பதால், வரும் கோடை காலத்துக்குள், சோலார் மோட்டார் கிடைக்குமா என, விவசாயிகள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா