Skip to main content

பட்டதாரி ஆசிரியர்களைப் போல தேர்வுநிலை தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கும் ஊதிய உயர்வு.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து 10 ஆண்டுகள் ஒரே பதவியில் பணியாற்றி வந்தால் அவர்களுக்கு தேர்வு நிலை அந்தஸ்து வழங்கப்பட்டு அடுத்த நிலை பதவிக்குரிய சம்பளம் வழங்கப்படும். 
ஆறாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி
ஆசிரியர் பதவி,பட்டதாரி ஆசிரியர் பணிக்கு இணையானதாக கருதப் பட்டு அதே ஊதிய விகிதம் (அடிப்படைச் சம்பளம் ரூ.9,300, தர ஊதியம் ரூ.4,600) நிர்ணயிக்கப்பட்டது.பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வுநிலை அந்தஸ்து பெறும்போது அவர்களின் தர ஊதியம் ரூ.4600-லிருந்து ரூ.4,800 ஆக உயர்த்தி ஊதியம் திருத்தி யமைக்கப்படுகிறது.4,800 வழங்க உத்தரவு.

இந்த நிலையில், பட்டதாரி ஆசிரியர்களைப் போன்று தேர்வுநிலை அந்தஸ்து பெறும் தொழிற்கல்வி ஆசிரியர்களின் தர ஊதியத்தையும் ரூ.4600-லிருந்து ரூ.4,800 ஆக உயர்த்தி வழங்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு பள்ளிக்கல்வி இயக்குனருக்கு தமிழக அரசின் நிதித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Popular posts from this blog

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

ஆசிரியர் இல்லாமல் நாம் இல்லை!-முனைவர் மா.தச.பூர்ணாச்சாரி,வழக்கறிஞர், மதுரை.94432 66674.

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் பள்ளிப்பருவம் முக்கியமானது. முதன் முதலாக தாய் தந்தையுடன் சென்று, புத்தாடை அணிந்து, ஆசிரியரை வணங்கி, புத்தரிசி அல்லது நெல்லில் எழுத்தை எழுதத் துவங்கிய நாளை மறக்க இயலாது.வெளி உலகைப் புரிந்து கொள்ளவும், தாய் தந்தையரால் தர முடியாத கல்வி மற்றும் பயிற்சியினை கல்வி மூலமாக ஆசிரியரால்