Skip to main content

பட்டதாரி ஆசிரியர்களைப் போல தேர்வுநிலை தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கும் ஊதிய உயர்வு.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து 10 ஆண்டுகள் ஒரே பதவியில் பணியாற்றி வந்தால் அவர்களுக்கு தேர்வு நிலை அந்தஸ்து வழங்கப்பட்டு அடுத்த நிலை பதவிக்குரிய சம்பளம் வழங்கப்படும். 
ஆறாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி
ஆசிரியர் பதவி,பட்டதாரி ஆசிரியர் பணிக்கு இணையானதாக கருதப் பட்டு அதே ஊதிய விகிதம் (அடிப்படைச் சம்பளம் ரூ.9,300, தர ஊதியம் ரூ.4,600) நிர்ணயிக்கப்பட்டது.பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வுநிலை அந்தஸ்து பெறும்போது அவர்களின் தர ஊதியம் ரூ.4600-லிருந்து ரூ.4,800 ஆக உயர்த்தி ஊதியம் திருத்தி யமைக்கப்படுகிறது.4,800 வழங்க உத்தரவு.

இந்த நிலையில், பட்டதாரி ஆசிரியர்களைப் போன்று தேர்வுநிலை அந்தஸ்து பெறும் தொழிற்கல்வி ஆசிரியர்களின் தர ஊதியத்தையும் ரூ.4600-லிருந்து ரூ.4,800 ஆக உயர்த்தி வழங்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு பள்ளிக்கல்வி இயக்குனருக்கு தமிழக அரசின் நிதித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா