Skip to main content

பழுதான கட்டடத்தில் வகுப்பு நடத்தக் கூடாது - தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித் துறை அறிவுறுத்தல்


 அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பழுதானகட்டடங்களில் வகுப்புகள் நடத்த வேண்டாமென, தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
தமிழகத்தில், கடந்த 14ம் தேதி முதல், தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது
. இதனால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. பொதுமக்கள் வெளியே வரமுடியாமல் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதற்கிடையே, கடலூர் மாவட்டத்தில் உள்ள, அரசு மற்றும்தனியார் பள்ளிகளில் பழுதான கட்டடங்களில் வகுப்புகள் நடத்த வேண்டாம்என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "மழைக் காலம் துவங்கியுள்ளதால் பழுதான கட்டடங்களில் வகுப்புகள் நடத்தக் கூடாது. மின்கசிவு ஏற்பட்டால் மின்சார வாரியத்திற்கு தகவல் தெரிவித்து சரி செய்து கொள்ள வேண்டும். மழைநீர் தேங்கி நிற்கும் இடங்களில் மாணவர்களை விளையாட அனுமதிக்கக் கூடாது. கட்டுமான பணிகள் நடக்கும் இடங்களில் மாணவர்கள்செல்லாத வகையில் தடுப்புவேலி ஏற்படுத்த வேண்டும் என, சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது' .

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு