Skip to main content

குரூப்-4 தேர்வுக்கு இலவசப் பயிற்சி!!


           இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட பதவிகளில் 4,963 காலியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி குரூப்-4 எழுத்துத் தேர்வு டிசம்பர் 21-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு கல்வித்தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி.
              குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு சென்னை மாவட்ட
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் (பொது) செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் (ஸ்டடி சர்க்கிள்) மூலம் இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
பயிற்சி வகுப்புகள் நவம்பர் மாதத்தில் திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 2 முதல் மாலை 6 மணி வரை நடைபெறும்.
இலவசப் பயிற்சியில் கலந்துகொள்ள தேர்வுக்கு விண்ணப்பித்த அத்தாட்சி, 10-ம் வகுப்பு கல்வி சான்றிதழ் , வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அடையாள அட்டை நகல்களுடன் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தை (பொது) வரும் 28-ம்தேதிக்குள் நேரில் அணுகுமாறு சென்னை மாவட்ட ஆட்சியர் ஏ.சுந்தரவள்ளி தெரிவித்துள்ளார்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா