Skip to main content

பிளஸ்-2 சிறப்பு துணைத்தேர்வு முடிவு வெளியிடப்படுகிறது

தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட மாட்டாது
பிளஸ்-2 சிறப்பு துணைத்தேர்வு முடிவு 27.10.2014 திங்கள்கிழமை வெளியிடப்படுகிறது. தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட மாட்டாது. மதிப்பெண் சான்றிதழை தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய
மையங்களில் நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம்.

இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் கே.தேவராஜன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கடந்த செப் டம்பர் மாதம் 25 முதல் அக்டோபர் 10-ம் தேதி வரை நடைபெற்ற பிளஸ்-2 துணைத்தேர்வை எழுதிய தனித்தேர்வர்கள் (தட்கல் தனித் தேர்வர்கள் 
உட்பட) மதிப்பெண் சான்றிதழ்களை நாளை (திங்கள் கிழமை) பிற்பகல் 2 மணி முதல், அவர்கள் தேர்வெழுதிய மையங்களில் நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம். தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட மாட்டாது. விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப் பட்டுள்ள அரசுத் தேர்வுத்துறையின் சேவை மையங்களில் வருகிற 29, 30, 31-ம் தேதிகளில் நேரில் சென்று ஆன்லைனில் விண்ணப்பித்துக்கொள்ளலாம். உரிய கட்டணத்துடன் ஆன் லைன் பதிவுக் கட்டணமாக ரூ.50-ஐ பணமாகச் செலுத்த வேண்டும். விடைத்தாள் நகல் பெற பகுதி 1 மொழி பாடத்துக்கு ரூ.550, பகுதி 2 மொழித்தாளுக்கு (ஆங்கிலம்) ரூ.550, இதர பாடங்களுக்கு தலா ரூ.275 கட்டணம் ஆகும். மறுகூட்டல் கட்டணம் பகுதி 1 மொழி தாள் மற்றும் பகுதி 2 மொழித்தாளுக்கு (ஆங்கிலம்) ரூ.305,- உயிரியல் மற்றும் ஏனைய பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் தலா -ரூ.205 கட்டணம் செலுத்த வேண்டும். விண்ணப்பித்த பிறகு வழங் கப்படும் ஒப்புகைச்சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்தித்தான் விடைத்தாள் நகல்களை இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்ய முடியும், மேலும், மறுகூட்டல் முடிவு களையும் அறிய முடியும். எனவே, ஒப்புகைச் சீட்டை பத்திரமாக வைத்திருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு