Skip to main content

விருப்ப ஓய்வு பெற்றவருக்கு 28 வருட பணப்பலன்களை வழங்க ஐகோர்ட் உத்தரவு


மதுரை, வடக்கு வட்டத்தில் நில அளவைத்துறை துணை ஆய்வாளராக பணியாற்றிய பாண்டி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:

நில அளவைத்துறையில் துணை ஆய்வாளராக பணியாற்றியபோது 31.1.1999ல் விருப்ப ஓய்வு வழங்கப்பட்டது. நில அளவராக பணியாற்றியபோது 1.11.1965ல்
எனது பணி ஒழுங்குபடுத்தப்பட்டது. இதன் படி 4.12.1971ல் நில அளவை துணை ஆய்வாளராக பதவி உயர்வு வழங்கி இருக்க வேண்டும். ஆனால் எனக்கு பதவி உயர்வு வழங்கவில்லை. அதேநேரம் இரு உத்தரவுகளில் 530 பேருக்கு 4.12.1971 முதல் கணக்கிடப்பட்டு பணப்பலன்கள் வழங்கப்பட்டது.

ஆனால் எனக்கு மட்டும் 6.8. 2010 முதல் கணக்கிட்டு பணப்பலன்கள் வழங்கப்பட்டது. 530 பேருக்கு வழங்கியதை போல எனக்கு சேரவேண்டிய பணப்பலன்களை 4.12.1971 முதல் வழங்கி, எனது ஓய்வூதியத்தை திருத்தி அமைக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.நாகமுத்து, 530 பேருக்கு வழங்கியதைப் போல, மனுதாரருக்கும் 4.12.1971 முதல் பணப்பலன்களை வழங்க வேண்டும். இதன்படி அவரது ஓய்வூதியத்தை 3 மாதத்திற்குள் திருத்தியமைக்க வேண்டும், என வருவாய்துறை செயலாளருக்கு உத்தரவிட்டார்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு