Skip to main content

TET இந்த வார இறுதிக்குள் தீர்ப்பு வருமா?


          சென்னை அமர்வு நீதிமன்றத்தில் TET குறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. ஆனால் 5% தளர்விற்கு எதிரான வழக்கின் வாதங்கள் மட்டுமே நடைபெற்றது. இந்த வாதங்களே கிட்டதட்ட 3 மணிநேரம் நடைபெற்றது.
         வாதிகளின் தரப்பில் அனுபவம் வாய்ந்த 4 வழக்குரைஞர்கள்
வாதாடினார்கள். அவர்களில் திருமதி.நளினி சிதம்பரம், திரு.சங்கரன். போன்றோர் குறிப்பிடதக்கவர்கள்.

              வாதிகளின் வழக்குரைஞர்களாகிய இவர்கள் 5% தளர்வு வழங்கியது தவறில்லை, ஆனால் முன் தேதியிட்டு வழங்கியது தவறென்றும், அரசியல் காரணங்களுக்காக 5% தளர்வு வழங்கப்பட்டதென்றும், SC&ST பிரிவினருக்கு 5% தளர்வு வழங்கியது தவறில்லை ஆனால் BC&MBC பிரிவினருக்கும் சேர்த்து 5% தளர்வு வழங்கியது தவறு. BC&MBC பிரிவினருக்கு 3% மட்டுமே தளர்வு வழங்கியிருக்க வேண்டும் என்றும் இது போன்ற மேலும் சில வாதங்களையும் முன்வைத்தனர்..

           அரசு தரப்பில் வாதாடிய AG திரு.சோமையாஜி மற்றும் பள்ளிக்கல்வித்துறை சிறப்பு வழக்குரைஞர் திரு.கிரிஷ்ணமூர்தி அவர்களும் தற்போது பின்பற்றப்பட்டுள்ள அனைத்து வழிமுறைகளும் நீதிமன்றம் பரிந்துரைத்ததன் பேரிலும், நீதிமன்ற வழிகாட்டுதலின் படியும்தான் பின்பற்றப்பட்டுள்ளது என்று விளக்கமளித்தார்கள்..

                         இன்று (16.09.2014) - 5% தளர்வு குறித்த விவாதமும்,G.O 71 குறித்த முழு விவாதமும் முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே வேளையில் இந்த வழக்குகளுக்கான தீர்ப்பும் இந்த வார இறுதிக்குள் வரும் என்றும் நம்பப்படுகிறது.

Thanks to Mr. Balamuthu.

Popular posts from this blog

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

ஆசிரியர் இல்லாமல் நாம் இல்லை!-முனைவர் மா.தச.பூர்ணாச்சாரி,வழக்கறிஞர், மதுரை.94432 66674.

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் பள்ளிப்பருவம் முக்கியமானது. முதன் முதலாக தாய் தந்தையுடன் சென்று, புத்தாடை அணிந்து, ஆசிரியரை வணங்கி, புத்தரிசி அல்லது நெல்லில் எழுத்தை எழுதத் துவங்கிய நாளை மறக்க இயலாது.வெளி உலகைப் புரிந்து கொள்ளவும், தாய் தந்தையரால் தர முடியாத கல்வி மற்றும் பயிற்சியினை கல்வி மூலமாக ஆசிரியரால்