Skip to main content

RTI யில் தகவல் கோர காரணம் தெரிவிக்க வேண்டாம்

RTI யில் தகவல் கோர காரணம் தெரிவிக்க வேண்டாம் - சென்னை உயர் நீதிமன்றம்
தகவல் கோருபவர், காரணத்தை தெரிவிக்க வேண்டும்' என, ஏற்கனவே தெரிவித்த கருத்தை, சென்னை உயர் நீதிமன்றம், தானாக முன்வந்து, நீக்கி
உள்ளது.
புதுச்சேரியைச் சேர்ந்த, பாரதி என்பவர், தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ், சில தகவல்களை, உயர் நீதிமன்றத்திடம் கோரினார். அவர் கோரிய தகவல்கள், ஆவணங்களை அளிக்கும்படி, பொது தகவல் அதிகாரியான, உயர் நீதிமன்ற பதிவாளருக்கு (நிர்வாகம்), மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், பதிவாளர் (நிர்வாகம்) மனுத் தாக்கல் செய்தார். மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்த, 'டிவிஷன் பெஞ்ச்', பொதுவான கருத்துக்களை தெரிவித்திருந்தது. கடந்த, 17ம் தேதி, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.அதில், 'தகவல் கோரும் விண்ணப்பத்தில், குறைந்தபட்ச விவரங்கள் இருக்க வேண்டும் அல்லது தகவல் கோருவதற்கான காரணம் தெரிவிக்க வேண்டும்' என, குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில், அந்த உத்தரவை, தானாக முன் வந்து, நீதிபதிகள் என்.பால்வசந்தகுமார், ரவிச்சந்திரபாபு அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்', மறு ஆய்வுக்கு எடுத்து, பிறப்பித்த உத்தரவு: தகவல் பெறும் உரிமை சட்டத்தில், பிரிவு 6 (2)ஐ, கவனிக்காமல், பொதுவான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டது. இந்தச் சட்டப்பிரிவின்படி, தகவல் கோருபவர், காரணம் தெரிவிக்க வேண்டியதில்லை.எனவே, நீதிமன்றம் தெரிவித்த பொதுவான கருத்து, தவறானது. உத்தரவு பிறப்பித்த பின், இந்த தவறை, நாங்கள் கவனித்தோம். மறுஆய்வு செய்ய, விசாரணைக்கு பட்டியலிட, பதிவுத் துறைக்கு உத்தரவிடப்பட்டது.எங்கள் உத்தரவில், இரண்டு பத்திகளில் தெரிவித்துள்ள, பொதுவான கருத்துக்கள், தகவல் பெறும் உரிமை சட்டப் பிரிவு 6 (2)க்கு எதிரானது. இந்த, இரண்டு பத்திகளையும், உத்தரவில் இருந்து நீக்க வேண்டும். அதை நீக்கி விட்டு, சரி செய்த உத்தரவின் நகலை, பதிவுத் துறை வழங்க வேண்டும்.இவ்வாறு, 'டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு