Skip to main content

GPF கணக்கு எண் இல்லைநகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கு சிக்கல்


       தமிழகத்தில், நகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கான ஜி.பி.எப்., கணக்கு எண்கள்  வழங்கப்படாததால், அவர்கள் சம்பளம் பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
          நகராட்சிகளின் கீழ் 65 துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இவற்றில் 650க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு, டீச்சர்ஸ் பிராவிடண்ட் பண்ட் (டி.பி.எப்.,) பிடித்தம்
செய்யப்படுகிறது. இப்பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு, ஆசிரியர்கள் தகுதி மற்றும் பணி அனுபவம் அடிப்படையில், அரசு உயர்நிலை பள்ளிகளுக்கு பணிமாற்றம் செய்யப்படுகின்றனர்.
          அப்போது, அவர்களுக்கு ஜி.பி.எப்., கணக்கு துவங்கி, சம்பளத்தில் பணம் பிடித்தம் செய்ய வேண்டும்.இவ்வாறு, நகராட்சி பள்ளிகளில் இருந்து அரசு உயர்நிலைப் பள்ளிகளுக்கு பணிமாற்றம் பெற்ற ஆசிரியர்களுக்கு கடந்த நான்கு ஆண்டுகளாக ஜி.பி.எப்., கணக்கு எண்கள் துவங்கப்படவில்லை. இதுகுறித்து மாநில கணக்காயர் அலுவலகத்திற்கு எழுதி கேட்டால், அரசுப்பள்ளி என குறிப்பிட்டால் தான் 'ஜி.பி.எப்., கணக்கு எண்' துவக்க முடியும், என தெரிவித்துத்துள்ளது.
        ஆசிரியர்கள் தற்போது கருவூலம் மூலம் சம்பளம் பெறவும், ஜி.பி.எப்., கணக்கு எண் முக்கியம் என வலியுறுத்தப்படுகிறது. 'அந்த கணக்கு எண் இல்லை என்றால் சம்பளம் வழங்க முடியாது' என கருவூலங்களும் கைவிரித்துவிட்டன. இதனால், இனி வரும் மாதங்களில் நகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், வங்கி கடன் உள்ளிட்ட பல்வேறு பயன்களை பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
         தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சங்க மதுரை செயலாளர் பிரபாகரன், சட்ட செயலாளர் வெங்கடேசன் கூறுகையில், 'அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கான நடைமுறைகளை நகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கும் நீடிக்க வேண்டும். நான்கு ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள ஜி.பி.எப்., வங்கி கணக்குகளை நகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கும் துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்