Skip to main content

பஸ் நிறுத்தம் பெயர்களை அறிவிக்கும் 'பேசும் சிக்னல்': அரசு பள்ளி ஆசிரியை அசத்தல்


            பஸ் பயணத்தின்போது நிறுத்தங்கள் பெயர்களை முன்கூட்டியே அறிவிக்கும் 'பேசும் சிக்னல்' கருவியை, மதுரை திருநகரை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியை வெங்கடேஸ்வரி கண்டுபிடித்துள்ளார்.


                    மதுரை, சென்னையில் அரசு பஸ்களில் செல்ல வேண்டும் என்றாலே கூட்ட நெரிசல் தான் நம் நினைவுக்கு வரும். பஸ்சில் ஏறி
தப்பித்தவறி கூட்ட நெரிசலில் சிக்கிக்கொள்ளும் நபர்கள், இறங்க வேண்டிய பஸ் நிறுத்தம் வந்திருச்சா...வரலையா... எப்போ வரும் என எட்டி எட்டி பார்க்கும் பரிதாப நிலையை நாம் பார்க்கலாம். நகர்களில் வசிப்பவர்களுக்கே இந்த நிலைமை என்றால் கிராமங்களில் இருந்து நகருக்கு வருபவர்கள் நிலை அதோ கதிதான்.இவர்களுக்கு தீர்வு காணும் வகையில் தான், பஸ் பயணத்தின் போது, பஸ் நிறுத்தம் பெயர்களை முன்கூட்டியே அறிவிக்கும் 'பேசும் சிக்னல்' கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

               இக்கருவியின் செயல்பாடு குறித்து ஆசிரியை வெங்கடேஸ்வரி கூறியதாவது:நான் கள்ளிக்குடி யூனியன் லாலாபுரம் நடுநிலை பள்ளியில் அறிவியல் ஆசிரியையாக உள்ளேன். எடிசன் போன்று சாதாரண மக்கள் பயன்பெறும் வகையில் சிறிய கண்டுபிடிப்புகள் பல கண்டுபிடிக்க வேண்டும். பல நாட்கள் உழைப்பில் இக்கருவி உருவானது. இதை பஸ்ஸில் பொருத்தினால், கண்டக்டர், டிரைவர் உதவி இல்லாமல் பஸ் நிறுத்த பெயர்களை பயணிகளே தெரிந்துகொள்ளலாம்.பொதுவாக பஸ் நிறுத்தங்களின் ரோட்டோரத்தில் மின் கம்பங்கள் அடுத்தடுத்து இருக்கும். அதில், 'சென்சார்' கருவிகளை பொருத்த வேண்டும். சம்மந்தப்பட்ட பஸ்ஸின் பின்புற படிக்கட்டு பகுதியில் 'ரிசீவர்' கருவியை பொருத்த வேண்டும். ஒவ்வொரு நிறுத்தத்தையும் பஸ் கடக்கும் போதும், பஸ்ஸில் பொருத்தப்பட்டுள்ள பிரத்யேக கருவியில், ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட பஸ் நிறுத்த பெயர்கள் ஒலிக்கும்.

                அரசு தாழ்தள சொகுசு பஸ்களில் கதவுகள் திறந்து மூடும் முறையில் அமைக்கப்பட்ட தொழில் நுட்பத்துடன் சிறிய மாற்றத்துடன் இந்த கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பஸ் நிறுத்தம் வந்தவுடன் 'சுவிட்சை' டிரைவர் அழுத்தினால், ஆடியோ, வீடியோ இரண்டிலும் பஸ் நிறுத்த பெயர்களை அறிவிக்கும் வகையிலும் இக்கருவியை மாற்றியமைக்கலாம். இதற்கு, டி.வி.டி., பிளேயர் அல்லது எப்.எம்., பிளேயர், பென் டிரைவர், ஸ்பீக்கர் உள்ளிட்ட விலை குறைந்த பொருட்கள் இருந்தாலே போதும். ஒரு கருவியை ரூ.500க்குள் தயாரிக்க முடியும். மதுரையில் அரசு பஸ்களில் இதை பொருத்தினால் பயணிகள் பயன்பெறுவர், என்றார்.இவரை 95975 78803 எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு