Skip to main content

மீண்டும் 'ஜம்பிங்' வினாத்தாள் - தேர்வுத்துறை இயக்குனரகம் உத்தரவு


கடந்த 2013-ம் ஆண்டு வரை அறிமுகத்தில் இருந்த, 'ஜம்பிங்' எனப்படும், இரு வினாத்தாள் முறை வரும் 25-ம் தேதி தொடங்க உள்ள பிளஸ் 2 தேர்வில் அறிமுகப்படுத்த,மேல்நிலைக்கல்வி தேர்வுத்துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.கடந்த 2013 மார்ச் மேல்நிலைத்தேர்வு மற்றும் அதற்கு
முந்தைய மேல்நிலை தேர்வுகளில், இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், விலங்கியல் மற்றும் கணிதம் ஆகிய ஆறு பாடங்களுக்கு மட்டும், ஒரு மதிப்பெண் வினாக்கள், 'ஜம்பிங்' முறையில் அமைக்கப்பட்டு, 'ஏ.பி.,' என இரு வினாத்தாள்கள், தேர்வர்களுக்கு விநியோகிக்கப்பட்டு தேர்வு நடத்தப்பட்டது. 'ஏ,பி' என இரு வினாத்தாள்கள் இருப்பதால், இவற்றை திருத்தி, வாங்குவதற்குரிய கால அவகாசம் அதிகமானது.


இதனால், 2013 மார்ச்சுக்கு பிறகு நடந்த தேர்வுகளில் இம்முறை கைவிடப்பட்டு, ஒரே வினாத்தாள் வழங்கப்பட்டது. அனைவருக்கும் ஒரே வினாத்தாள் என்பதால், அருகருகே, அமர்ந்திருக்கும் மாணவர்கள் காப்பி அடிப்பது, ஒரு சில பள்ளிகளில், சைகை மூலம் ஒரு மதிப்பெண் வினாவுக்கு விடை சொல்வது தொடர்ந்தன. இதனால்,மீண்டும் 'ஜம்பிங்' முறையை அறிமுகப்படுத்த தேர்வுத்துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

அரசு தேர்வுகள் இயக்கக மேல்நிலை கல்வி இணை இயக்குனர் ராஜராஜேஸ்வரி விடுத்துள்ள சுற்றறிக்கை: வரும் 25-ம் தேதி தொடங்கி, அக்.10-ம் தேதி முடிய உள்ள, மேல்நிலை தேர்வுகளின்போது, முந்தைய மேல்நிலை தேர்வுகளில், பின்பற்றப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு, 'ஏ,பி., ஜம்பிங்' முறை வினாத்தாள்கள் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விபரங்களை, முதன்மை கல்வி அலுவலர்கள் தேர்வு மைய கண்காணிப்பாளர்களுக்கு, தெரிவித்து அவர்கள் தேர்வு மைய அறை கண்காணிப்பாளர்களுக்கு தெரியப்படுத்த கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Popular posts from this blog

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

ஆசிரியர் இல்லாமல் நாம் இல்லை!-முனைவர் மா.தச.பூர்ணாச்சாரி,வழக்கறிஞர், மதுரை.94432 66674.

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் பள்ளிப்பருவம் முக்கியமானது. முதன் முதலாக தாய் தந்தையுடன் சென்று, புத்தாடை அணிந்து, ஆசிரியரை வணங்கி, புத்தரிசி அல்லது நெல்லில் எழுத்தை எழுதத் துவங்கிய நாளை மறக்க இயலாது.வெளி உலகைப் புரிந்து கொள்ளவும், தாய் தந்தையரால் தர முடியாத கல்வி மற்றும் பயிற்சியினை கல்வி மூலமாக ஆசிரியரால்