Skip to main content

ஈஎஸ்எல்சி தேர்வெழுதும் தனித்தேர்வர்கள் கவனத்துக்கு..



ஈஎஸ்எல்சி பொதுத் தேர்வு செப்டம்பர் 2014 - தனித்தேர்வர்கள் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டுகளை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்தல் தொடர்பாக தமிழக அரசு தேர்வுகள் இயக்ககம் செய்தி வெளியிட்டுள்ளது.


          அதில், செப்டம்பர் மாதம் நடைபெறும் ஈ.எஸ்.எல்.சி பொதுத் தேர்வு எழுத,
அரசுத் தேர்வுத் துறையால் அறிவிக்கபட்ட நாட்களில் அரசுத் தேர்வுகள் சேவை மையங்களில் ஆன்-லைன் மூலமாக விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் 18.09.2014 (வியாழக் கிழமை) முதல் www.tndge.in என்ற இணையதளத்தின் மூலம் தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

www.tndge.in என்ற இணையதளத்திற்குச் சென்று “ESLC SEPTEMBER 2014 EXAMINATION - HALL TICKET” என்ற வாசகத்தினை கிளிக் செய்து அதில் தோன்றும் பக்கத்தில் தங்களது விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்தால் அவர்களுடைய தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு திரையில் தோன்றும். அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

உரிய தேர்வுக்கூட அனுமதிச் சீட்டின்றி எந்த ஒரு தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப்படமாட்டார்கள்.

இத்திட்டத்தில் விண்ணப்பித்தத் தனித்தேர்வர்களுக்கு தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு குறித்து தனிப்பட்ட முறையில் அறிவிப்பு ஏதும் அனுப்ப இயலாது எனவும் தெரிவிக்கப்படுகிறது என்று அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

முன்னுதாரணமாக விளங்கும் வடமணப்பாக்கம் அரசு தொடக்கப் பள்ளி

எண்ம முறையில் பாடம் கற்றல், குழந்தைகள் நூல்கள் வாசித்தல், கணினிபயிற்சி பெறுதல், அறிவியல் ஆய்வகம் என பல சிறப்பு அம்சங்களுடன் சுகாதாரம், ஒழுக்கம் ஆகியவற்றுடன் சேர்ந்து கல்வி கற்பிக்கப்படுகிறது.