Skip to main content

பள்ளி மாணவர்களுக்கு விரைவில் அட்லஸ் புத்தகங்கள்


பள்ளி மாணவர்களுக்கு அட்லஸ் புத்தகங்கள் விரைவில் வழங்கப்படும் என தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் பணிகள் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நிகழ் கல்வியாண்டில் (2014-15) அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு படிக்கும் 11 லட்சம் மாணவர்களுக்கு இலவசமாக அட்லஸ் புத்தகங்களை ஜூலை மாதத்துக்குள் வழங்க தமிழக அரசு திட்டமிட்டிருந்தது.

இந்த நிலையில், ஆந்திரத்தைப் பிரித்து தெலங்கானா மாநிலத்தை
உருவாக்கும் மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் நிறைவேற்றப்பட்டாலும், மத்திய அரசின் அரசிதழில் வெளியாகாமல் இருந்தது. இதன் காரணமாக, இரு மாநிலங்களுக்கிடையே அதிகாரப்பூர்வமான எல்லை வரையறை செய்யப்படாமல் இருந்தது. அரசிதழில் இந்த மசோதா வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, இப்போது இந்திய வரைபடங்களுக்கு அனுமதி கோரி தலைமை நில அளவையாளர் அலுவலகத்தில் பதிப்பாளர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

இந்த அனுமதி கிடைத்ததும் அட்லஸ் புத்தகங்கள் உடனடியாக அச்சடிக்கப்பட்டு மாணவர்களுக்கு விநியோகிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த ஆண்டு ஆறாம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு பல்வேறு காரணங்களால் அட்லஸ் புத்தகம் வழங்கப்படவில்லை. இப்போது ஏழாம் வகுப்பு படிக்கும் அந்த மாணவர்களுக்கும் இந்த ஆண்டு அட்லஸ் புத்தகங்கள் வழங்கப்படும்.

இலவசக் காலணிகள், புத்தகப் பைகள் எப்போது?: அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் 77 லட்சம் மாணவர்களுக்கு ஒரு ஜோடி இலவசக் காலணிகள், 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் 1 கோடி மாணவர்களுக்கு இலவசப் புத்தகப் பைகள் வழங்கப்பட உள்ளன.

இதில் முதல் கட்டமாக, காலணிகளும், புத்தகப் பைகளும் வரத் தொடங்கியுள்ளன. இந்தப் பொருள்கள் மாவட்டங்களுக்கு வந்து சேர்ந்த பிறகு, இவற்றின் தரம் பரிசோதிக்கப்பட்ட பிறகு மாணவர்களுக்கு விநியோகம் செய்யப்படும். இந்த ஆண்டு கடுமையான தரப் பரிசோதனை நடைமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. எனவே, குறைந்தபட்சம் இரண்டு மாதங்களுக்குள் மாணவர்களுக்கு காலணிகளும், புத்தகப் பைகளும் விநியோகிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு