Skip to main content

கூடுதல் பணியிட ஆசிரியர்களுக்கு சம்பளம்'தினமலர்' செய்தி எதிரொலி


மாநில அளவில் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு 'பணிநிரவல்' மாறுதல் கலந்தாய்வு ஜூன் 26ல்
நடந்தது. அப்போது மாநிலம் முழுவதும் கணக்கெடுக்கப்பட்ட உபரி(சர்பிளஸ்) ஆசிரியர்களை 'பணி நிரவல்' அடிப்படையில் வேறு மாவட்டங்களுக்கு மாற்ற
முடிவு செய்யப்பட்டது.

இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் உபரி ஆசிரியர் எண்ணிக்கையை கணக்கிட்டு, மாவட்டம் தோறும் கூடுதல் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டன.இக்கூடுதல் இடங்களில் 400க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மாநிலம் முழுவதும் நியமிக்கப்பட்டனர்.  மதுரையில் 29 ஆசிரியர்களுக்கு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டன. இவர்கள் பணியில் சேர்ந்த பின், நிதித்துறை ஒப்புதல் கிடைக்காததால், ஜூலை, ஆகஸ்ட் மாத சம்பளம் கிடைக்கவில்லை.
இதுகுறித்து 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. இந்நிலையில், கூடுதல் பணியிடங்களில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு இரண்டு நாட்களாக அடுத்தடுத்து சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.கல்வித் துறையின் இந்த நடவடிக்கைக்கு, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் சங்கம் மற்றும் ஆசிரியர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்