Skip to main content

காலாண்டு தேர்வை உரிய நேரம் வரை எழுதாத மாணவர் விபரம் சேகரிப்பு


          காலாண்டு தேர்வை உரிய நேரம் வரை எழுதாமல் நடுவில் விடைத்தாள்களை கொடுத்து செல்லும் மாணவர்களின் பெயர், விபரம் சேகரிக்கப்படுகிறது என முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்தார்.

              தமிழகம் முழுவதும் 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு
செப்.26ம் தேதி வரை காலாண்டு தேர்வுகள் நடைபெறுகின்றன. காலாண்டு தேர்வை பொதுத்தேர்வு போல நடத்த அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

              இது குறித்து விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் கூறுகையில், காலாண்டு தேர்விற்கு அறைக்குள் வரும் மாணவர்களை சோதனையிட்டு உள்ளே அனுப்ப வேண்டும். ஆசிரியர்கள் தேர்வு நேரத்தில் சுற்றி வர வேண்டும். அனுமதிக்கப்பட்ட நேரம் வரை மாணவர்கள் தேர்வு எழுத வேண்டும். முன்கூட்டியே விடைத்தாள்களை தந்து வெளியே செல்லக்கூடாது. அவ்வாறு வெளியேறும் மாணவர்களின் பெயர், விவரம் சேகரிக்கப்படுகிறது.

தேர்வு நேரத்திற்கு முன்னதாக வெளியேறும் மாணவர்கள் உரிய முறையில் பாடங்களை படிக்கவில்லை என கருதப்படும். விடைத்தாள் குறிப்புகள் தயாரித்து பள்ளிகளுக்கு அனுப்பப்படும் என்றார்.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

முன்னுதாரணமாக விளங்கும் வடமணப்பாக்கம் அரசு தொடக்கப் பள்ளி

எண்ம முறையில் பாடம் கற்றல், குழந்தைகள் நூல்கள் வாசித்தல், கணினிபயிற்சி பெறுதல், அறிவியல் ஆய்வகம் என பல சிறப்பு அம்சங்களுடன் சுகாதாரம், ஒழுக்கம் ஆகியவற்றுடன் சேர்ந்து கல்வி கற்பிக்கப்படுகிறது.