Skip to main content

அபராதத்துடன் வருமான வரி செலுத்த வேண்டும்அரசு ஊழியர்களுக்கு 'நோட்டீஸ்'

'அரசுப் பணியாளர்களிடம் பிடித் தம் செய்த தொகையை, முறையாக செலுத்தாததால், அபராதத்துடன் வருமான வரியை செலுத்த வேண்டும்' என, வருமான வரித்துறை 'நோட்டீஸ்' அனுப்புவதால், அரசுப்பணியாளர்கள் புலம்பி வருகின்றனர்.ஆண்டுக்கு, 2 லட்சம் ரூபாய்க்கு மேல் வருவாய்
ஈட்டுவோர், வருமான வரி செலுத்த வேண்டும். இந்த தொகையை, மோடி தலைமையிலான புதிய அரசு, 2.5 லட்சம் ரூபாயாக உயர்த்தியுள்ளது.

முந்தைய ஆண்டுக்கான வருமான வரி செலுத்த, இந்த ஆண்டு ஜூலையுடன் கால அவகாசம் முடிந்தது. தனி நபர் முதல், நிறுவனங்கள் வரை, மாதச் சம்பளம் பெறுவோரும் வருமான வரிக்கான படிவங்களை தாக்கல் செய்தனர். அரசு துறைகளில் பணியோற்றுவோருக்கு சம்பளத்திலேயே, வருமான வரி பிடித்தம் செய்யப்பட்டது. 

ஆனால், பிடித்தம் செய்யப்பட்ட பணம், மாநில கருவூலக் கணக்கு அலுவலகத்தில் இருந்து, முறையாக வருமான வரித்துறைக்கு சென்று சேரவில்லை.வருமான வரிக்கான படிவங்களை பூர்த்தி செய்து கொடுத்தோருக்கு, 'உங்கள் கணக்கில், வருமான வரி செலுத்தப்படவில்லை; அபராதத்துடன், இவ்வளவு தொகை செலுத்த வேண்டும்' என, வருமான வரித்துறை, 'நோட்டீஸ்' அனுப்பி வருகிறது. 
வருவாய் துறை உள்ளிட்ட, பல்வேறு துறைகளின் அரசு ஊழியர்களுக்கும், இந்த, 'நோட்டீஸ்' வந்த வண்ணம் உள்ளது. 'சம்பளத்தில் பிடித்தம் செய்த தொகையை, அரசு செலுத்தாததற்கு நாங்கள் ஏன், அபராதம் கட்ட வேண்டும்' என, அரசு பணியாளர்கள் புலம்புகின்றனர். 
'எங்கள் சம்பளத்தில், வருமான வரியை அரசு பிடித்தம் செய்து விட்டது. அரசு தான் வருமான வரித்துறைக்கு செலுத்த வேண்டும்; நாங்கள், அபராதம் செலுத்த வாய்ப்பில்லை' என, 'நோட்டீஸ்' கிடைத்தோர், பதில் அனுப்பி வருகின்றனர். 


இதுகுறித்து, கருவூலத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'வருமான வரி பிடித்தம் செய்த தொகை, ஒவ்வொரு பகுதியாக, வருமான வரித்துறைக்கு செலுத்தப்பட்டு வருகிறது. ஊழியர்கள் அச்சம் அடையத் தேவையில்லை' என்றனர்.'பிடித்தம் செய்த பணத்தை, முறையாக செலுத்தி இருந்தால், ஊழியர்களை பரிதவிக்க விடாமல் தவிர்த்திருக்க முடியும். வரும் ஆண்டுகளிலாவது அரசு, இதுபோன்ற சிக்கல் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்' என, அரசுப்பணியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு