Skip to main content

இப்போது சென்னை செண்ட்ரலிலும் இலவச வை-ஃபை இண்டெர்நெட்

சென்னை செண்டரல் ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருக்க நேர்ந்தாலோ அல்லது உறவினர்களை வரவேற்க காத்திருந்தாலோ இனி மந்தமான அனுபவத்தை அது ஏற்படுத்த போவது இல்லை. ஏனெனில் தென்னிந்தியாவின் பரபரப்பான ரயில்வே முனையங்களில் ஒன்றான சென்னை செண்டிரல் ரயில் நிலையத்தில், மொபைல் போன் மற்றும் லேப்டாப் மூலமாக இலவசமாக வை-ஃபை பயன்படுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 


இன்று இந்த வசதியை அறிமுகப்படுத்திய மத்திய ரயில்வே துறை மந்திரி சதானந்த கவுடா, தனது மொபைல் போனிலும் பரிசோதனை செய்து கொண்டார். இந்த வசதி தற்போது சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மொபைல் போன், லேப்டாப், ஐபாடு பயனாளர்கள் 30 நிமிடங்கள் இலவசமாக தங்கள் சாதனங்களில் இந்த சலுகையை பயன்படுத்தி கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா