சென்னை செண்டரல் ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருக்க நேர்ந்தாலோ அல்லது உறவினர்களை வரவேற்க காத்திருந்தாலோ இனி மந்தமான அனுபவத்தை அது ஏற்படுத்த போவது இல்லை. ஏனெனில் தென்னிந்தியாவின் பரபரப்பான ரயில்வே முனையங்களில் ஒன்றான சென்னை செண்டிரல் ரயில் நிலையத்தில், மொபைல் போன் மற்றும் லேப்டாப் மூலமாக இலவசமாக வை-ஃபை பயன்படுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இன்று இந்த வசதியை அறிமுகப்படுத்திய மத்திய ரயில்வே துறை மந்திரி சதானந்த கவுடா, தனது மொபைல் போனிலும் பரிசோதனை செய்து கொண்டார். இந்த வசதி தற்போது சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மொபைல் போன், லேப்டாப், ஐபாடு பயனாளர்கள் 30 நிமிடங்கள் இலவசமாக தங்கள் சாதனங்களில் இந்த சலுகையை பயன்படுத்தி கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.