Skip to main content

சென்னை பல்கலை தொலைதூர கல்வி தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு


சென்னை பல்கலையின், தொலைதூர கல்வி மையம் சார்பில், பல்வேறு படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள், இன்று வெளியாகின்றன.
இதுகுறித்த பல்கலை செய்தி:
கடந்த ஜூனில், பல்கலையின் தொலைதூர கல்வி மையம் சார்பில், எம்.சி.ஏ., எம்.எஸ்சி., (ஐ.டி.,), நூலக இளங்கலை, முதுகலை, டிப்ளமோ மற்றும்
சான்றிதழ் படிப்புகளுக்கான தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வுகளுக்கான முடிவுகள், இன்று இரவு, 8:00 மணிக்கு,
பல்கலையின், 'www.ideunom.ac.in, www.unom.ac.in' ஆகிய இணைய தளங்களில் வெளியிடப்படும். இதில், ஏ11,12,13, சி,12 மற்றும், 13 ஆகிய எண்களில் துவங்கும் சேர்க்கை எண் கொண்ட எம்.சி.ஏ., மாணவர்கள்; ஏ12 மற்றும் சி13 ஆகிய துவக்க எண்களை கொண்ட, எம்.எஸ்சி., (ஐ.டி.,); ஏ 13 துவக்க எண்ணை கொண்ட, நூலக இளங்கலை, முதுகலை மாணவர்கள், மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம். மறுமதிப்பீட்டிற்கு, ஒரு தாளிற்கு, 750 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். மாணவர்கள், பல்கலையின் இணைய தளத்தில், மறுமதிப்பீட்டிற்கு பதிவு செய்ய வேண்டும். விண்ணப்பிக்க, 19ம் தேதி இறுதி நாள்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு